Friday, April 15, 2011

எனது புதிய நூல் "நேற்றுப் போல இருக்கிறது"

இளமைக்கால நினைவுகள் எவ்வளவு சுவையானவை. எளிதில் மறக்கக்கூடியவையா என்ன?

எங்கள் இளமைக்காலத்து நினைவுகளை அசைபோடும் கட்டுரைத்தொடரை நான் சில ஆண்டுகளாக "ஒரு பேப்பர்' பத்திரிகையில் எழுதிவந்தேன். குறிப்பிடக்கூடிய அள்வு வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற அவற்றில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஓவியர் ரமணியின் சித்திரங்களுடன் " நேற்றுப்போல இருக்கிறது" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவர இருக்கிறது.


இது யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தாரால் அச்சிடப்பட்டு, "கனகா பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.

ரமணியின் ஓவியங்கள் இந்தத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன.. எங்கள் சின்ன வயதில் சைக்கிள் பழகுவதென்பதை பெரிய சடங்காகவே நடத்தி முடிப்போம்..

"விடலைப் பருவத்தில் சைக்கிள் பழகி, எட்டாத பெடலை எட்டி உழக்கி, உழக்கி ஓடி, முழங்காற் சில்லை பெயர்க்கும் வகையில் கல் றோட்டில் விழுந்து எழும்பியும் சளைக்காமல் -

கடைசி, கடைசியாக ஒரு நாள் -
எப்படியோ சீற்றின் முன் நுனியில்; ஏறிக்குந்திக் கொண்டு கருமமே கண்ணாக சைக்கிள் ஓட, சீற்றின் பின்புறத்தில் பிடித்துக் கொண்டு ;நாரியை வளையாதை.. ஹாண்டிலை நேராய் பிடியடா..; என்று சொல்லிக் கொண்டே கூட ஓடி வந்த நண்பனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தொலைவில் கேட்பது எதையோ உணர்த்த -

திரும்பிப் பார்க்கும் சாத்தியமும், துணிவும் இல்லாமல்,
-

அதை சித்தரிக்கும் ரமணியின் படம் இது..இப்படி 36 படங்கள்..




பாலு மகேந்திராவின் "அழியாதகோலங்கள்' திரைப்படம் மாதிரி, சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" சிறுகதைத்தொகுதி மாதிரி எங்கள் சின்ன வயசு காலத்து அனுபவங்கள் இத்தொடரில் வருகின்றன.

வாசிக்கும் எவரும் அந்தக்கால நினைவுகளில் தோய்ந்து இன்புறுவார்கள் என நம்புகிறேன்.