Monday, May 30, 2011

பாரதி கலைக்கோவில் விழாவும் நூல் வெளியீடும்

எனது நாவலான "கரையைதேடும் கட்டுமரங்களுக்கு' தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இலக்கிய விருதுகளில் ஒன்றானா அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தம்ஐக்காக. பாரதி கலைக்கோவில் ஸ்கார்பரொவில் மே மாதம் 29ந்;திகதி பாராட்டு விழா எடுத்து கெளரவித்தது. அதிபர் பொ.கனகசபாபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பல இலக்கிய பிரமுகர்கஆளும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
<ப்ர்/>


எனது தாயார் திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம்> திருமதி கந்தவனம், திருமதி மாலினி அரவிந்தன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்த்து வைத்தார்கள். .


பாரதி கலைக்கோவில் நிறுவனர் எஸ்.மதிவாசன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.


அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் தலைமை உரை வழங்குகிறார்.


ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரன் ஆய்வுரை நிகழ்த்தும்போது..

திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி


அமுதன் அடிகள் விருதை எனக்கு கனடாவில் மீளளிப்பு செய்கிறார் தலைவர் பொ.கனகசபாபதி. அருகில் எனது துணைவியார்..


அமுதன் இலக்கீயவிருதுடன் நானும் துணைவியாரும்


எனது புதிய நூலான "நேற்றுப் போல இருக்கிறது" சிறப்புப் பிரதியை எனது அன்னையாரிடம் வழங்குகிறார் உதயன் ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்கள்.


வந்திருந்த அன்பர்களில் ஒரு பகுதி


எனது நாவல் பற்றி பலர் எழுதிய விமர்சனங்கள், நேர்காணல்கள், அமுதன் இலக்கியவிருது தொடர்பான கட்டுரைகள், வாழ்த்துச்செய்திகள் அடங்கிய சிறப்பு மலர் ஒன்றும் அன்று வெளியிடபட்டது. இந்த விழா மலரை தொகுத்து வழ்ங்கியவர் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள்.


என் மதிப்புக்குரிய பேராசிரியர் பாலசுந்தரம், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசபாபதி ஆகியோருடன் நான்,


கனடாவில் முதல் முறையாக ஒரு இலங்கைக் கலைஞனின் கதையை வில்லுப்பாட்டில் சொன்ன சோக்கல்லோ சண்முகம் வில்லிசைக் குழுவினருடன்..

Friday, April 15, 2011

எனது புதிய நூல் "நேற்றுப் போல இருக்கிறது"

இளமைக்கால நினைவுகள் எவ்வளவு சுவையானவை. எளிதில் மறக்கக்கூடியவையா என்ன?

எங்கள் இளமைக்காலத்து நினைவுகளை அசைபோடும் கட்டுரைத்தொடரை நான் சில ஆண்டுகளாக "ஒரு பேப்பர்' பத்திரிகையில் எழுதிவந்தேன். குறிப்பிடக்கூடிய அள்வு வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற அவற்றில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஓவியர் ரமணியின் சித்திரங்களுடன் " நேற்றுப்போல இருக்கிறது" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவர இருக்கிறது.


இது யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தாரால் அச்சிடப்பட்டு, "கனகா பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.

ரமணியின் ஓவியங்கள் இந்தத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன.. எங்கள் சின்ன வயதில் சைக்கிள் பழகுவதென்பதை பெரிய சடங்காகவே நடத்தி முடிப்போம்..

"விடலைப் பருவத்தில் சைக்கிள் பழகி, எட்டாத பெடலை எட்டி உழக்கி, உழக்கி ஓடி, முழங்காற் சில்லை பெயர்க்கும் வகையில் கல் றோட்டில் விழுந்து எழும்பியும் சளைக்காமல் -

கடைசி, கடைசியாக ஒரு நாள் -
எப்படியோ சீற்றின் முன் நுனியில்; ஏறிக்குந்திக் கொண்டு கருமமே கண்ணாக சைக்கிள் ஓட, சீற்றின் பின்புறத்தில் பிடித்துக் கொண்டு ;நாரியை வளையாதை.. ஹாண்டிலை நேராய் பிடியடா..; என்று சொல்லிக் கொண்டே கூட ஓடி வந்த நண்பனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தொலைவில் கேட்பது எதையோ உணர்த்த -

திரும்பிப் பார்க்கும் சாத்தியமும், துணிவும் இல்லாமல்,
-

அதை சித்தரிக்கும் ரமணியின் படம் இது..இப்படி 36 படங்கள்..




பாலு மகேந்திராவின் "அழியாதகோலங்கள்' திரைப்படம் மாதிரி, சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" சிறுகதைத்தொகுதி மாதிரி எங்கள் சின்ன வயசு காலத்து அனுபவங்கள் இத்தொடரில் வருகின்றன.

வாசிக்கும் எவரும் அந்தக்கால நினைவுகளில் தோய்ந்து இன்புறுவார்கள் என நம்புகிறேன்.

Tuesday, March 15, 2011

அமுதன் அடிகள் இலக்கிய விருது விழா.- செய்திகள்

அமுதன் அடிகள் விருது பற்றிய செய்திகள் இந்தியாவில் "தினமணி" பத்திரிகையிலும், புதுடில்லியிலிருந்து "வடக்குவாசல்" இணையச்சஞ்சிகையிலும் கனடாவில் "உதயன்" , "தாய்வீடு" பத்திரிகைகளிலும், இலங்கையில் ;தினக்குரல்', வீரகேசரி பத்திரிகைகளிலும், லண்டனிலிருந்து "காற்றுவெளி" இணையசஞ்சிகையிலும், இலங்கையிலிருந்து யாழ்மண்' இணையச்சஞ்சிகயிலும், டென்மார்க்கிலிருந்து 'அலைகள் ஈ-நியூஸ்' இணையத்தளத்திலும் வெளிவந்துள்ளன்.

மேற்குறித்த பத்திரிகை நிறுவனங்களுக்கும், யாழ்மண், அலைகள் இணையத்தளங்களுக்கும், "வடக்குவாசல்"பென்னேஸ்வரன், "காற்றுவெளி" முல்லை அமுதன், 'தமிழாரம்' குரு அரவிந்தன், எஸ்.கே.ராஜன் ஆகியோர்க்கும் என் நன்றி.


"வடக்குவாசல்" இணைய இதழில் விருது பற்றிய கட்டுரை இங்கே -

"யாழ்மண்" இணைய இதழில் விருது பற்றிய கட்டுரை இங்கே.

"அலைகள்" இணையத்தளத்தில்
விருதுபற்றிய கட்டுரை இதோ -

வீரகேசரி கட்டுரை




தினக்குரல் கட்டுரை -
கே. எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கிய விருது

(துஷி ஞானப்பிரகாசம்)

2009ஆம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய பரிசு ஈழத்தைச் சேர்ந்த கலைஞரும் எழுத்தாளருமான கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டுமுதல், வருடாவருடம் வழங்கப்பட்டுவரும் இந்த விருது தமிழி;ன் முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது பெற்றவர்கள் பட்டியலில் கவிஞர் சல்மா, தோப்பில் முகமது மீரான், நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன், பாமா. இந்திரா பார்த்தசாரதி, ஜோ. டீ. குரூஸ் ஆகிய படைப்பாளிகளும் அடங்குகின்றனர். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறை.

கே. எஸ். பாலச்சந்திரன், மலர் மணாளன் எனும் புனைபெயரில் எழுதிய சிறுகதைகள் இலங்கையின் பிரபல வார ஏடுகளான வீரகேசரி, தினகரன் போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. சிரித்திரன் பத்திரிகைக்கு அவர் எழுதிய 'சிரிகதை'களும் பிரபலமானவை. இலங்கையைவிட்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்த பின்னும் இவர் தொடர்ந்து எழுதிவருகிறார். நினைவெழுதுதல் பாணியிலமைந்த இவரது எழுத்துக்கள் ஈழத்தமிழர்கள் இழந்துபோன ஒருகாலத்தின் பதிவுகளாக ஒரு பேப்பர், தாய்வீடு போன்ற ஏடுகளில் தொடர்ந்து வெளியாகி வரவேற்புப் பெற்று வருகின்றன.

இவரின் முதலாவது நாவலான 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' 2009இல் வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. எழுபதுகளில், இலங்கை போர்ச்சூழலுக்குள் திணிக்கப்படுமுன்னர், இலங்கையின் கரையோர கிராமமொன்றை களமாகக்கொண்டமைந்த இந்த நாவலை அறிவிப்பாளர் பி. எச் அப்துல் ஹமீத் 'ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச்சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு' என கூறியது மிகையில்லை.

மேடை நாடகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்கள், திரைப்படங்கள் ஆகிய துறைகளுக்கும் இவரது எழுத்து வளமூட்டியிருக்கிறது. இந்தத் துறைகளுக்கு இவர் செய்த அளிக்கைகள் இவரை சிறந்த கலைஞராகவும் அடையாளம் காட்டியுள்ளன. இலங்கையில் இவர் உருவாக்கிய 'வாத்தியார் வீட்டில்' வானொலி நாடகமும், 'அண்ணை றைற்' என்ற முன்னோடி மேடை நிகழ்வும் பின்னர் ஒலியிழையாக வெளியிடப்பட்டன. கனடாவிலும், கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம், மனவெளி கலையாற்றுக் குழு போன்ற நாடக அமைப்புக்கள் ஊடாகவும், பல்வேறு தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள10டாகவும் அவர் தொடர்ந்தும் இந்தத் துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பெப்ரவரி 26ஆம் திகதி தஞ்சாவூரின் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், கே. எஸ். பாலச்சந்திரனுடன், எழுத்தாளர் சோ. தர்மன் 2008ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் விருதையும், நாடகாசிரியர் முத்துவேலழகன் 2010ம் ஆண்டுக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.


தினமணி செய்தி -
"இளைஞர்களுக்கு தமிழ் உணர்வு தேவை'

தஞ்சாவூர், பிப். 27: இன்றைய இளைய சமூகத்துக்கு தமிழ் உணர்வு தேவை என்றார் தமிழக வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா.
தஞ்சாவூரில் சனிக்கிழமை அமுதன் அடிகள் வெள்ளி விழா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 2008,2009,2010 ஆண்டுகளுக்கான அமுதன் அடிகள் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மேலும் அவர் பேசியது:
தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றாக மனித நேயம் உள்ளது. இலக்கியவாதிகளிடத்தில் மனித நேயம் அதிகமிருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாய வளர்ச்சிக்காக அவர்களுடைய உழைப்பு இருக்கும். எதையும் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உடைய அவர்களை, நாம் எவ்விதப் பாகுபாடுமின்றிப் பாராட்ட வேண்டும்.
கிபி 19, 20 ஆம் நூற்றாண்டு தமிழின் மேன்மையான மறுமலர்ச்சிக் காலம். இன்றைய நிலையில் தமிழ் உணர்வு 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது. இளைஞர்களிடத்தில் தமிழ் உணர்வும், உணர்ச்சியும் வீறுகொண்டு எழவேண்டும். நல்லத் தமிழை ஆளவிட வேண்டும்.
படிக்க படிக்கத்தான் எழுத முடியும், பேச முடியும். நல்ல நூல்களை படிக்க வேண்டும். காசு கொடுத்து நூல்களை வாங்க வேண்டும். படிக்கும் உணர்வை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனித நேயம், பண்பு வளர வேண்டும். அப்பணியை படைப்பாளிகள் செய்து வருகிறார்கள் என்றார் உபயதுல்லா.
விழாவில் அறக்கட்டளைத் தலைவர் அமுதன் அடிகள் பேசியது:
1995-ல் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் வெள்ளி விழாவையொட்டி இவ்விழா நடைபெறுகிறது. வேறுபாடு, பாகுபாடு, ஏற்றத்தாழ்வு இல்லாமல் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு தகுதியான தேர்வுக்குப் பின் பரிசு வழங்கப்படுகிறது.
இதுவரை படைப்பாளிகள் தோப்பில் முகமது மீரான், வல்லிக்கண்ணன், முனைவர் இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி, இமயம், மேலாண்மை பொன்னுசாமி, பாமா, பெருமாள் முருகன், எஸ்.வி. ராஜதுரை, கவிஞர் சல்மா, ஜோ டி குரூஸ் ஆகியோருக்கு இலக்கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இலக்கிய வளர்ச்சி, சமுதாய வளர்ச்சிக்காவே நடத்தப்படுகிறது அறக்கட்டளை. விழா நடத்துவதற்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகிறது என்றார் அமுதன் அடிகள்.
பரிசு பெற்றவர்கள் விவரம்:
எழுத்தாளர்கள் சோ. தர்மன் (2008), கே.எஸ். பாலச்சந்திரன் (2009) (இவருக்கான பரிசை தூசன்ஹேண்டி பெற்றார்), நாடக இயக்குநர், எழுத்தாளர் முத்துவேலழகன் (2010). பரிசுத்தொகை ரூ. தலா 15,000 ஆகும்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச்செயலர் ரா. காமராசு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகி வெ. ஜீவக்குமார் ஆகியோர் படைப்புகள் குறித்துப் பேசினர்.
அறக்கட்டளை முன்னாள் அறங்காவலர் ஜே.ஜே. பார்னாண்டோ, அறங் காவலர்கள் வெ.க. சந்திரமோகன், ஜோ. ராஜன், உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்திரபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்தார். திருவருட் பேரவை தஞ்சை மாவட்டச் செயலர் ஜெ. கலந்தர் நன்றி கூறினார்.


Wednesday, March 2, 2011

அமுதன் அடிகள் இலக்கிய விருது விழா.

அமுதன் அடிகள் அறக்கட்டளையினர் வழ்ங்கும் "அமுதன் அடிகள் இலக்கியவிருது : 2009 எனது நாவலான :கரையைத் தேடும் கட்டுமரங்கள்'க்காக் சென்ற பெப்ருவரி 26,சனிக்கிழமை தஞசாவூரில் பெசன்ட் அரங்கில் வழ்ங்கப்பட்டபோது எனது மருமகன் துஷான் என்சார்பில் கலந்துகொண்டு எனது உரையை வாசித்து விருதுடன் கெளரவங்களை பெற்றுக்கொண்டார்.

ஏராளமான நண்பர்கள், அபிமானிகள் தொலைபேசிமூலமும், மின்னஞசல் மூலமும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். கனேடிய பல்கலாச்சார வானொலி , உதயன் - ஆகிய ஊடகங்களுக்கும் நன்றி.

Monday, February 28, 2011

எனக்கு அமுதன் அடிகள் இலக்கியப்பரிசு - 2009

எனது முதலாவது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்களு"க்காக தமிழகத்தின் உயர்ந்த விருதுக்ளில் ஒன்றான "அமுதன் அடிகள் இலக்கியவிருது - 2009 வழங்கப்பட்டுள்ளது. பெப்ருவரி 26ந்த்கதி தஞ்சாவூரில் பெசன்ற் அரங்கில் நடைபெற்ற விழாவில் 15,000 பணப்பரிசிலுடன் பட்டயமும் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கல் பற்றி பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் கூறுகிறார் உலகளாவிய ரீதியில் இந்த நாவல் வாசகர்களை சென்றடைந்தால், சிறந்த படைப்புக்களை சீர்தூக்கிப்பார்தது, விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல் சென்றடைய ஆவன செய்தால் , நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும். பி.எச். அப்துல் ஹமீட் ('கரையைத் தேடும் கட்டுமரங்கள் - நாவலுக்கான முன்னுரையில் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த தமிழ் அறிவிப்பாளரின் மேற்குறித்த வார்த்தைகள் நிஜமாகியிருக்கின்றன. 2002ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப்படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு 'அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு' வழங்கிவரும் அமுதன் அடிகள் அறக்கட்டளையினர், முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நூலுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது.

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' என்ற நாவலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைக்கிறது.

இம்மாதம் 26ந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ற் அரங்கில் நடைபெறும் விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களால் இவ்விருது வழங்கப்படுகின்றது.

இந்திய ருபாய 15 ஆயிரம் உள்ளிட்ட இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில்

தோப்பில் முகமது மீரான் (1996)
வல்லிக்கண்ணன் (1997)
இந்திரா பார்த்தசாரதி (1998)
நாஞ்சில் நாடன் (1999)
பூமணி (2000)
இமயம் (2001)
மேலாண்மை பொன்னுசாமி (2002)
பாமா (2003)
பெருமாள் முருகன் (2004)
எஸ்.வி. ராஜதுரை (2005) (படம் இல்லை)
கவிஞர் சல்மா (2006)
ஜோ டி குரூஸ் (2007)
சோ.தர்மன் (2008)
ஆகியோர் இந்த விருதைப்பெற்றிருக்கிறார்கள்.

தஞ்சாவூரில் நடைபெறும் 'அமுதன் அடிகள் அஙக்கட்டளை' இலக்கிய விருதுவிழாவில், 2008 ம் ஆண்டுக்;கான விருதை பிரபல நாவலாசிரியர் சோ.தர்மன் அவர்களும், 2009ம் அண்டுக்கான விருதை கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனும், 2010ம் அண்டுக்கான விருதை பிரபல நாடகாசிரியர் முத்துவேலழகள் அவர்களும் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்தவிழாவில் நேரடியாக கலந்து கொள்ளமுடியவில்லை. எனது சார்பில் எனது மருகர் துஷான் கலந்துகொண்டு, விருது, பட்டயம் எனபனவற்றை பெற்றதோடு எனது நன்றி உரையை வாசித்தார்.

எனது உரை இதோ-

அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.

அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை நிறுவனம் வருடந்தோறும் இலக்கிய படைப்புக்களுக்கு வழங்கி கௌரவித்துவரும் அமுதன் அடிகள் இலக்கியப் பரிசை இதுவரை பெற்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் வரிசை என்னைப் பிரமிக்கவைத்தது. அவர்கள் அனைவருமே என் ஆதர்சத்துக்குரியவர்கள்.

இலங்கையில் பிறந்து, புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது முதலாவது நாவலான, கரையைத்தேடும் கட்டுமரங்கள் 2009 ஆண்டிற்கான அமுதன் அடிகள் இலக்கியப் பரிசை பெறுகின்ற செய்தி எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை தந்தது.

இன்றைய விழாவில் நான் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலையில், இந்த விழாவின் காரணகர்த்தாவான அமுதன் அடிகளுக்கும், கலந்துகொள்ளும், அத்தனை தமிழ் நெஞ்சங்;களுக்கும், அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளையினருக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று கௌரவப்படுத்தப்படும் மற்றைய இரு படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்

இறுதியாக எனக்குப் பிடித்த ஒரு பாடல் வரிகள்

பூமியின் அழகே பரிதியின் சுடரே
பொறுமையின் வடிவே தமிழே
நாநிலம் பரவ நம் நாவினில் மலர்வாய்
நற்றமிழ் மொழியே வணக்கம்.

எங்கும் அலைந்து திரிந்து கிடப்பினும்,
ஏதிலி வாழ்வில் உதிரம் வடிப்பினும்
எங்கள் மொழிக்கொரு புதுவளம் சேர்ப்போம்
எண்ணமெல்லாம் தமிழென வாழ்வோம்

-கவிஞர் சேரன்