Sunday, September 27, 2009

தினக்குரலில் என் நாவல் அறிமுகம்


இலங்கையின் தினக்குரல் பத்திரிகையில் எனது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் பற்றிய அறிமுகம் வெளிவந்துள்ளது.

"எழுத்தின் ரசனை இலக்கியத்துக்குள்ளேயே பொதிந்திருக்கும். துல்லியமாக தன்னுள்ளே சமூக உணர்வுகளின் வெளிப்பாடுகளினை எழுத்துக்களால் இங்கிதமாக ரசனையுடன் படைக்கப்படும் படைப்பாக அமைகிறது. இவ்வாறு தனக்கென்று தனியான இடத்தினை இறுகப்பிடித்துள்ள நாவல்களின் தோற்றம் இன்றைய காலங்களில் அருமையாகவே காணப்படுகின்ற நிலையில் ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச்சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பாக, புலம்பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் சமூக நினைவுகளை பாதுகாப்பாகவும், பசுமையாகவும் சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் சிற்பமாக "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் நூலகத்துள் வருகை தந்துள்ளமை ஈழத்து தமிழ் நாவல் இலக்கியச்சமூகத்திற்கு கிடைத்துள்ள அரும்சொத்தாகும்......"
இவ்வாறு தொடர்கிறது இந்த அறிமுகம்..

Sunday, September 13, 2009

"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" - எனது நாவல்



தினமும் வாழ்வுக்காக அலைகளோடு ஜீவமரணப்போராட்டம் நடத்தி மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பும், இரக்கமும்;தான் என்னை இந்த நாவலை எழுதத்தூண்டியிருக்கிறது. – கே.எஸ்.பாலச்சந்திரன்

பகலும் இரவும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்த மாலைப்பொழுதில்...
மேற்கிலிருந்து அடித்த வாடைக் கச்சான் காற்று, கடற்கரையை பார்த்துக்கொண்டு நின்றிருந்த அந்தோனியின் பொத்தான்கள் இல்லாத சேர்ட்டை பின்னே தள்ளி நெஞ்சுக்கூட்டை குளிரினால் சில்லிட வைத்தது.

- “கரையைத்தேடும் கட்டுமரங்கள்” நாவலிலிருந்து


கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் -

கரையைத்தேடும் கட்டுமரங்கள் வெளியீட்டுவிழா
ஒக்டோபர் 3' 2009
சனிக்கிழமை
மாலை 5.30க்கு
இடம்:
அஜின்கோட் சமூக நிலையம்
31, கிளென் வாட்போர்ட் டிறைவ்
ஸ்காபரோ, ஒன்ராரியோ



குமுதம் குழுமம் சார்ந்த "தீராநதி" சஞ்நிகையின் செப்ரம்பர் 2009 இதழில் -







நடிகர் கமலஹாசன் எனது நாவலுடன் -
என் நெருங்கிய நண்பனும், எனது நாவலுக்கு முன்னுரையெழுதியிருப்பவருமான உலகறிந்த தமிழ் ஒலிபரப்பாளனான பி.எச்.அப்துல் ஹமீட் மூலமாக நான் நடிகர் கமலுக்கு அறிமுகமாகியதும், எனது நாடக ஒலி நாடாக்கள் அவருக்கு "தெனாலி" திரைப்படத்தில் உதவியாகவிருந்ததும், அதை "தெனாலி" வெள்ளிவிழா மேடையில் கமல் குறிப்பிட்டு என்னை பெருமைப்படுத்தியதையும் மகிழ்வுடன் நினைவு கூருகிறேன்.

அண்மையில் நண்பர் ஹமீட், நடிகர் கமலைச் சந்தித்தபொழுது, எனது நாவலை அவருக்கு கொடுத்து இருக்கிறார். கமலை நான் கனடாவில் சந்தித்து உரையாடியவற்றை அவர் நினைவுபடுத்தியருக்கிறார். சந்தோசமான நிகழ்வுகள்...