Tuesday, October 9, 2012

தலைக்கோல் விருது வழங்கினார்கள்


சென்ற ஞாயிற்றுகிழமையன்று (07.10.12) டொரொன்ரோவில் ஸ்காபரோ சமூக மைய அரங்கில் எனக்கு தலைக்கோல் விருது வழங்கி கெள்ரவித்தார்கள்.

பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமையில் இந்த விழா அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மொன்றியலைச் சேர்ந்த இரா,நடராஜா என்ற அன்பரின் ஏற்பாட்டில் இந்தவிழா இத்தகைய சிறப்புடன் நடந்தேறியது ஆச்சர்யம் தருகிறது. திரு இரா. நடராசா அவர்கட்கும், கலைஞர் சோக்கெல்லோ சண்முகம் அவர்கட்கும் முழுப்பாராட்டும் உரித்துடையது.

"பாரதிரத்தன் பாலச்சந்திரன்" என்ற தலைப்பில் எனது கதையை கூறும் வில்லுப்பாட்டை சோக்கெல்லோ சண்முகம் வில்லடிப்பாட்டுக் குழுவினர் நிகழ்த்தி கலக்கி விட்டார்கள்.

அத்தோடு கனடாவில் முதன்முறையாக ஒரு கலைஞனுக்கு வழங்குவதாக அறிவித்து, மிகுந்த அலங்காரங்களுடன் "தலைக்கோல் விருது" வழங்கினார்கள். நண்பர் வீ.என்.மதியழகன் தலைக்கோல் பற்றிய அருமையான விளக்கம் அளித்து< விருதை எனக்கு வழ்ங்கினார். தலைக்கோல் பற்றி அறியாதவர்கட்கு சரியான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

இவற்றோடு விட்டுவிடாமல் எனது வரலாற்றை கூறும் 186 பக்கங்களுடைய
"பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை"
என்ற தலைப்பில் வர்ணப்படங்களுடன் நூல் ஒன்றையும் வெளியிட்டார்கள்.

விழாவின் நிறைவில் "ஒரு கலைஞனின் பயணம்" என்ற எனது விவரணச்சித்திரம் அன்பர்கள் வி.திவ்யராஜன் - செல்வன் ஆகியோரின் உருவாக்கத்தில் பார்வையாளர்களை வெகுவாகாக் கவர்ந்த்து.

இவ்விழாவைபற்றி ஈகுருவி இணையத்தளம், கரவைக்குரல் இணையத்தளம் என்பன படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது. அவர்களுக்கு நன்றி.
http://ekuruvi.com/ks%20balachandran
(கரவைக்குரல்) http://karavaikkural.blogspot.ca/2012/10/blog-post_8.html

Friday, October 5, 2012

சாகிதய மன்றத்தின் சான்றிதழும் விழா மலரும்

2

2011ம் ஆண்டில் பிரசுரமான நூல்களில் நானாவிதப்பிரிவில் எனது நேற்றுப்போல இருக்கிறது நூலை சிறந்த நூலாக தெரிவு செய்து இலங்கை சாகித்ய மன்றம் அறிவித்ததோடு சாகித்ய விழா மலரிலும் அத்தகவலை இடம் பெறச் செய்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது

2009ல் எனது முதலாவது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" அமுதன் அடிகள் இலக்கிய விருதை பெற்றபின்னர் எனது இரண்டாவது நூலான "நேற்றுப்போல இருக்கிறது" இலங்கை சாகித்ய விருது பெறத் தேர்வானது ஒரு எழுத்தாளனாக எனக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்று நான் நினைக்கிறேன்.

Tuesday, October 2, 2012

இலங்கையில் சாகித்ய விருதும் திடீர் திருப்பங்களும்

செப்டெம்பார் 26' 2012 ஒரு மறக்கமுடியாத நாள். அன்று நள்ளிரவில் இலங்கை சாகித்ய மண்டலத்திலிருந்து எனது இரண்டாவது நூலான "நேற்றுப்போல இருக்கிறது'க்கு பல்துறை பகுதியில் சாகித்ய விருது கிடைத்திருப்பதாக தொலைபேசி செய்தி வந்தது.
முதல் நூலான கரையைதேடும் கட்டுமரங்கள் இந்தியாவில் அமுதன் அடிகள் விருது பெற்றபின் மீண்டும் இப்படி ஒரு கெள்ரவம் பிறந்த நாட்டில் கிடைக்கும் சந்தோசம் அடுத்தநாள் கலைந்து போனது. . கீழே அறிவிப்பை பாருங்கள்....

.இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012 .... கொழும்பு:

< கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.2012) வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வருடாந்த தேசிய சாகித்திய விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.
ஆண்டுதோறும் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் எழுந்த மிகச் சிறந்த நூல்களுக்கு தேசிய சாகித்திய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், 2011ம் ஆண்டு சிறுகதை, நாவல், கவிதை, காவியம், மொழிபெயர்ப்பு, ஆய்வு முதலான பல துறைகளிலும் வெளிவந்த மிகச் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றுக்கான விருதுகள் இவ்விழாவில் வழங்கி வைக்கப்பட்டன.

இம்முறை தேசிய சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
br/ 01. சிறந்த நாவல் - “சொடுதா” - எஸ்.ஏ.உதயன்
02. சிறந்த சிறுகதைத் தொகுதிகள்
i) “வெள்ளி விரல்” - ஆர். எம்.நௌஷாத்
ii) “நெல்லிமரத்துப் பள்ளிக்கூடம்” - நந்தினி சேவியர்
03. காவியம் - “தோட்டுப்பாய் மூத்தம்மா” - பாலமுனை பாரூக்
04. கவிதை - “நிலம் பிரிந்தவனின் கவிதை” - சுஜந்தன்
05. சிறந்த ஆய்வு - “இந்துக் கணித வானியல் மரபு” - ச.முகுந்தன்
06. சிறந்த நாடக நூல் - “கருவறையில் இருந்து” - கந்தையா ஸ்ரீகந்தவேள்
07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - “அம்மாவின் ரகசியம்” - எம்.ரிஷான் ஷெரீப்
08. சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை - “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன்
09. சிறந்த மொழிபெயர்ப்பு (சிறுவர் இலக்கியம்) - “காட்டுப்புற வீரர்கள்” - திக்குவல்லைக் கமால்
10. சிறந்த மொழிபெயர்ப்பு (பல்துறை) - “பர்மிய பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்
தேசிய சாகித்திய விருதுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நூல்களுள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான ஏனைய நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
01. விபுலானந்தர் காவியம் - சுப்ரமணியம் சிவலிங்கம்
02. வாத்தியார் மாப்பிள்ளை - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
03. அலைக்குமிழ் - அகளங்கன்
04. காடும் கழனியும் - ஆ.மு.பி. வேலழகன்
05. அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - தாட்சாயணி
06. நேற்றுப்போல் இருக்கிறது - கே.எஸ். பாலச்சந்திரன்
07. மீண்டு வந்த நாட்கள் - வதிரி. சி. ரவீந்திரன்
08. ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீபிரசாந்தன்
09. குறுங்கூத்துக்கள் - கலையார்வன்
10. முல்லைத் தீவுத் தாத்தா - திக்குவல்லை கமால்
இலங்கையில் தேசிய சாகித்திய விருதுபெற்ற தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்கும் இந்நேரம்.காம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
(நன்றி - இந்நேரம்.காம்)