சென்ற ஞாயிற்றுகிழமையன்று (07.10.12) டொரொன்ரோவில் ஸ்காபரோ சமூக மைய அரங்கில் எனக்கு தலைக்கோல் விருது வழங்கி கெள்ரவித்தார்கள்.
பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமையில் இந்த விழா அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மொன்றியலைச் சேர்ந்த இரா,நடராஜா என்ற அன்பரின் ஏற்பாட்டில் இந்தவிழா இத்தகைய சிறப்புடன் நடந்தேறியது ஆச்சர்யம் தருகிறது. திரு இரா. நடராசா அவர்கட்கும், கலைஞர் சோக்கெல்லோ சண்முகம் அவர்கட்கும் முழுப்பாராட்டும் உரித்துடையது.
"பாரதிரத்தன் பாலச்சந்திரன்" என்ற தலைப்பில் எனது கதையை கூறும் வில்லுப்பாட்டை சோக்கெல்லோ சண்முகம் வில்லடிப்பாட்டுக் குழுவினர் நிகழ்த்தி கலக்கி விட்டார்கள்.
அத்தோடு கனடாவில் முதன்முறையாக ஒரு கலைஞனுக்கு வழங்குவதாக அறிவித்து, மிகுந்த அலங்காரங்களுடன் "தலைக்கோல் விருது" வழங்கினார்கள். நண்பர் வீ.என்.மதியழகன் தலைக்கோல் பற்றிய அருமையான விளக்கம் அளித்து< விருதை எனக்கு வழ்ங்கினார். தலைக்கோல் பற்றி அறியாதவர்கட்கு சரியான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
இவற்றோடு விட்டுவிடாமல் எனது வரலாற்றை கூறும் 186 பக்கங்களுடைய
"பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை"என்ற தலைப்பில் வர்ணப்படங்களுடன் நூல் ஒன்றையும் வெளியிட்டார்கள்.
விழாவின் நிறைவில் "ஒரு கலைஞனின் பயணம்" என்ற எனது விவரணச்சித்திரம் அன்பர்கள் வி.திவ்யராஜன் - செல்வன் ஆகியோரின் உருவாக்கத்தில் பார்வையாளர்களை வெகுவாகாக் கவர்ந்த்து.
இவ்விழாவைபற்றி ஈகுருவி இணையத்தளம், கரவைக்குரல் இணையத்தளம் என்பன படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது. அவர்களுக்கு நன்றி.
http://ekuruvi.com/ks%20balachandran
(கரவைக்குரல்) http://karavaikkural.blogspot.ca/2012/10/blog-post_8.html
No comments:
Post a Comment