அமுதன் அடிகள் விருது பற்றிய செய்திகள் இந்தியாவில் "தினமணி" பத்திரிகையிலும், புதுடில்லியிலிருந்து "வடக்குவாசல்" இணையச்சஞ்சிகையிலும் கனடாவில் "உதயன்" , "தாய்வீடு" பத்திரிகைகளிலும், இலங்கையில் ;தினக்குரல்', வீரகேசரி பத்திரிகைகளிலும், லண்டனிலிருந்து "காற்றுவெளி" இணையசஞ்சிகையிலும், இலங்கையிலிருந்து யாழ்மண்' இணையச்சஞ்சிகயிலும், டென்மார்க்கிலிருந்து 'அலைகள் ஈ-நியூஸ்' இணையத்தளத்திலும் வெளிவந்துள்ளன்.
மேற்குறித்த பத்திரிகை நிறுவனங்களுக்கும், யாழ்மண், அலைகள் இணையத்தளங்களுக்கும், "வடக்குவாசல்"பென்னேஸ்வரன், "காற்றுவெளி" முல்லை அமுதன், 'தமிழாரம்' குரு அரவிந்தன், எஸ்.கே.ராஜன் ஆகியோர்க்கும் என் நன்றி.
"வடக்குவாசல்" இணைய இதழில் விருது பற்றிய கட்டுரை இங்கே -
"யாழ்மண்" இணைய இதழில் விருது பற்றிய கட்டுரை இங்கே.
"அலைகள்" இணையத்தளத்தில் விருதுபற்றிய கட்டுரை இதோ -
வீரகேசரி கட்டுரை
தினக்குரல் கட்டுரை -
கே. எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கிய விருது
(துஷி ஞானப்பிரகாசம்)
2009ஆம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய பரிசு ஈழத்தைச் சேர்ந்த கலைஞரும் எழுத்தாளருமான கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டுமுதல், வருடாவருடம் வழங்கப்பட்டுவரும் இந்த விருது தமிழி;ன் முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது பெற்றவர்கள் பட்டியலில் கவிஞர் சல்மா, தோப்பில் முகமது மீரான், நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன், பாமா. இந்திரா பார்த்தசாரதி, ஜோ. டீ. குரூஸ் ஆகிய படைப்பாளிகளும் அடங்குகின்றனர். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறை.
கே. எஸ். பாலச்சந்திரன், மலர் மணாளன் எனும் புனைபெயரில் எழுதிய சிறுகதைகள் இலங்கையின் பிரபல வார ஏடுகளான வீரகேசரி, தினகரன் போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. சிரித்திரன் பத்திரிகைக்கு அவர் எழுதிய 'சிரிகதை'களும் பிரபலமானவை. இலங்கையைவிட்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்த பின்னும் இவர் தொடர்ந்து எழுதிவருகிறார். நினைவெழுதுதல் பாணியிலமைந்த இவரது எழுத்துக்கள் ஈழத்தமிழர்கள் இழந்துபோன ஒருகாலத்தின் பதிவுகளாக ஒரு பேப்பர், தாய்வீடு போன்ற ஏடுகளில் தொடர்ந்து வெளியாகி வரவேற்புப் பெற்று வருகின்றன.
இவரின் முதலாவது நாவலான 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' 2009இல் வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. எழுபதுகளில், இலங்கை போர்ச்சூழலுக்குள் திணிக்கப்படுமுன்னர், இலங்கையின் கரையோர கிராமமொன்றை களமாகக்கொண்டமைந்த இந்த நாவலை அறிவிப்பாளர் பி. எச் அப்துல் ஹமீத் 'ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச்சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு' என கூறியது மிகையில்லை.
மேடை நாடகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்கள், திரைப்படங்கள் ஆகிய துறைகளுக்கும் இவரது எழுத்து வளமூட்டியிருக்கிறது. இந்தத் துறைகளுக்கு இவர் செய்த அளிக்கைகள் இவரை சிறந்த கலைஞராகவும் அடையாளம் காட்டியுள்ளன. இலங்கையில் இவர் உருவாக்கிய 'வாத்தியார் வீட்டில்' வானொலி நாடகமும், 'அண்ணை றைற்' என்ற முன்னோடி மேடை நிகழ்வும் பின்னர் ஒலியிழையாக வெளியிடப்பட்டன. கனடாவிலும், கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம், மனவெளி கலையாற்றுக் குழு போன்ற நாடக அமைப்புக்கள் ஊடாகவும், பல்வேறு தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள10டாகவும் அவர் தொடர்ந்தும் இந்தத் துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.
பெப்ரவரி 26ஆம் திகதி தஞ்சாவூரின் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், கே. எஸ். பாலச்சந்திரனுடன், எழுத்தாளர் சோ. தர்மன் 2008ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் விருதையும், நாடகாசிரியர் முத்துவேலழகன் 2010ம் ஆண்டுக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்தி -
"இளைஞர்களுக்கு தமிழ் உணர்வு தேவை'
தஞ்சாவூர், பிப். 27: இன்றைய இளைய சமூகத்துக்கு தமிழ் உணர்வு தேவை என்றார் தமிழக வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா.
தஞ்சாவூரில் சனிக்கிழமை அமுதன் அடிகள் வெள்ளி விழா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 2008,2009,2010 ஆண்டுகளுக்கான அமுதன் அடிகள் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மேலும் அவர் பேசியது:
தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றாக மனித நேயம் உள்ளது. இலக்கியவாதிகளிடத்தில் மனித நேயம் அதிகமிருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாய வளர்ச்சிக்காக அவர்களுடைய உழைப்பு இருக்கும். எதையும் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உடைய அவர்களை, நாம் எவ்விதப் பாகுபாடுமின்றிப் பாராட்ட வேண்டும்.
கிபி 19, 20 ஆம் நூற்றாண்டு தமிழின் மேன்மையான மறுமலர்ச்சிக் காலம். இன்றைய நிலையில் தமிழ் உணர்வு 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது. இளைஞர்களிடத்தில் தமிழ் உணர்வும், உணர்ச்சியும் வீறுகொண்டு எழவேண்டும். நல்லத் தமிழை ஆளவிட வேண்டும்.
படிக்க படிக்கத்தான் எழுத முடியும், பேச முடியும். நல்ல நூல்களை படிக்க வேண்டும். காசு கொடுத்து நூல்களை வாங்க வேண்டும். படிக்கும் உணர்வை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனித நேயம், பண்பு வளர வேண்டும். அப்பணியை படைப்பாளிகள் செய்து வருகிறார்கள் என்றார் உபயதுல்லா.
விழாவில் அறக்கட்டளைத் தலைவர் அமுதன் அடிகள் பேசியது:
1995-ல் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் வெள்ளி விழாவையொட்டி இவ்விழா நடைபெறுகிறது. வேறுபாடு, பாகுபாடு, ஏற்றத்தாழ்வு இல்லாமல் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு தகுதியான தேர்வுக்குப் பின் பரிசு வழங்கப்படுகிறது.
இதுவரை படைப்பாளிகள் தோப்பில் முகமது மீரான், வல்லிக்கண்ணன், முனைவர் இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி, இமயம், மேலாண்மை பொன்னுசாமி, பாமா, பெருமாள் முருகன், எஸ்.வி. ராஜதுரை, கவிஞர் சல்மா, ஜோ டி குரூஸ் ஆகியோருக்கு இலக்கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இலக்கிய வளர்ச்சி, சமுதாய வளர்ச்சிக்காவே நடத்தப்படுகிறது அறக்கட்டளை. விழா நடத்துவதற்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகிறது என்றார் அமுதன் அடிகள்.
பரிசு பெற்றவர்கள் விவரம்:
எழுத்தாளர்கள் சோ. தர்மன் (2008), கே.எஸ். பாலச்சந்திரன் (2009) (இவருக்கான பரிசை தூசன்ஹேண்டி பெற்றார்), நாடக இயக்குநர், எழுத்தாளர் முத்துவேலழகன் (2010). பரிசுத்தொகை ரூ. தலா 15,000 ஆகும்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச்செயலர் ரா. காமராசு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகி வெ. ஜீவக்குமார் ஆகியோர் படைப்புகள் குறித்துப் பேசினர்.
அறக்கட்டளை முன்னாள் அறங்காவலர் ஜே.ஜே. பார்னாண்டோ, அறங் காவலர்கள் வெ.க. சந்திரமோகன், ஜோ. ராஜன், உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்திரபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்தார். திருவருட் பேரவை தஞ்சை மாவட்டச் செயலர் ஜெ. கலந்தர் நன்றி கூறினார்.
Sunday, March 6, 2011
Wednesday, March 2, 2011
அமுதன் அடிகள் இலக்கிய விருது விழா.
அமுதன் அடிகள் அறக்கட்டளையினர் வழ்ங்கும் "அமுதன் அடிகள் இலக்கியவிருது : 2009 எனது நாவலான :கரையைத் தேடும் கட்டுமரங்கள்'க்காக் சென்ற பெப்ருவரி 26,சனிக்கிழமை தஞசாவூரில் பெசன்ட் அரங்கில் வழ்ங்கப்பட்டபோது எனது மருமகன் துஷான் என்சார்பில் கலந்துகொண்டு எனது உரையை வாசித்து விருதுடன் கெளரவங்களை பெற்றுக்கொண்டார்.
ஏராளமான நண்பர்கள், அபிமானிகள் தொலைபேசிமூலமும், மின்னஞசல் மூலமும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். கனேடிய பல்கலாச்சார வானொலி , உதயன் - ஆகிய ஊடகங்களுக்கும் நன்றி.
ஏராளமான நண்பர்கள், அபிமானிகள் தொலைபேசிமூலமும், மின்னஞசல் மூலமும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். கனேடிய பல்கலாச்சார வானொலி , உதயன் - ஆகிய ஊடகங்களுக்கும் நன்றி.
Monday, February 28, 2011
எனக்கு அமுதன் அடிகள் இலக்கியப்பரிசு - 2009
எனது முதலாவது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்களு"க்காக தமிழகத்தின் உயர்ந்த விருதுக்ளில் ஒன்றான "அமுதன் அடிகள் இலக்கியவிருது - 2009 வழங்கப்பட்டுள்ளது. பெப்ருவரி 26ந்த்கதி தஞ்சாவூரில் பெசன்ற் அரங்கில் நடைபெற்ற விழாவில் 15,000 பணப்பரிசிலுடன் பட்டயமும் வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கல் பற்றி பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் கூறுகிறார் -
உலகளாவிய ரீதியில் இந்த நாவல் வாசகர்களை சென்றடைந்தால், சிறந்த படைப்புக்களை சீர்தூக்கிப்பார்தது, விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல் சென்றடைய ஆவன செய்தால் , நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும்.
பி.எச். அப்துல் ஹமீட் ('கரையைத் தேடும் கட்டுமரங்கள் - நாவலுக்கான முன்னுரையில்)
தமிழ்கூறும் நல்லுலகெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த தமிழ் அறிவிப்பாளரின் மேற்குறித்த வார்த்தைகள் நிஜமாகியிருக்கின்றன. 2002ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப்படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு 'அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு' வழங்கிவரும் அமுதன் அடிகள் அறக்கட்டளையினர், முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நூலுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது.
கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' என்ற நாவலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைக்கிறது.
இம்மாதம் 26ந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ற் அரங்கில் நடைபெறும் விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களால் இவ்விருது வழங்கப்படுகின்றது.
இந்திய ருபாய 15 ஆயிரம் உள்ளிட்ட இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில்
தோப்பில் முகமது மீரான் (1996)
வல்லிக்கண்ணன் (1997)
இந்திரா பார்த்தசாரதி (1998)
நாஞ்சில் நாடன் (1999)
பூமணி (2000)
இமயம் (2001)
மேலாண்மை பொன்னுசாமி (2002)
பாமா (2003)
பெருமாள் முருகன் (2004)
எஸ்.வி. ராஜதுரை (2005) (படம் இல்லை)
கவிஞர் சல்மா (2006)
ஜோ டி குரூஸ் (2007)
சோ.தர்மன் (2008)
ஆகியோர் இந்த விருதைப்பெற்றிருக்கிறார்கள்.
தஞ்சாவூரில் நடைபெறும் 'அமுதன் அடிகள் அஙக்கட்டளை' இலக்கிய விருதுவிழாவில், 2008 ம் ஆண்டுக்;கான விருதை பிரபல நாவலாசிரியர் சோ.தர்மன் அவர்களும், 2009ம் அண்டுக்கான விருதை கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனும், 2010ம் அண்டுக்கான விருதை பிரபல நாடகாசிரியர் முத்துவேலழகள் அவர்களும் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்தவிழாவில் நேரடியாக கலந்து கொள்ளமுடியவில்லை. எனது சார்பில் எனது மருகர் துஷான் கலந்துகொண்டு, விருது, பட்டயம் எனபனவற்றை பெற்றதோடு எனது நன்றி உரையை வாசித்தார்.
எனது உரை இதோ-
அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.
அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை நிறுவனம் வருடந்தோறும் இலக்கிய படைப்புக்களுக்கு வழங்கி கௌரவித்துவரும் அமுதன் அடிகள் இலக்கியப் பரிசை இதுவரை பெற்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் வரிசை என்னைப் பிரமிக்கவைத்தது. அவர்கள் அனைவருமே என் ஆதர்சத்துக்குரியவர்கள்.
இலங்கையில் பிறந்து, புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது முதலாவது நாவலான, கரையைத்தேடும் கட்டுமரங்கள் 2009 ஆண்டிற்கான அமுதன் அடிகள் இலக்கியப் பரிசை பெறுகின்ற செய்தி எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை தந்தது.
இன்றைய விழாவில் நான் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலையில், இந்த விழாவின் காரணகர்த்தாவான அமுதன் அடிகளுக்கும், கலந்துகொள்ளும், அத்தனை தமிழ் நெஞ்சங்;களுக்கும், அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளையினருக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று கௌரவப்படுத்தப்படும் மற்றைய இரு படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
இறுதியாக எனக்குப் பிடித்த ஒரு பாடல் வரிகள்
பூமியின் அழகே பரிதியின் சுடரே
பொறுமையின் வடிவே தமிழே
நாநிலம் பரவ நம் நாவினில் மலர்வாய்
நற்றமிழ் மொழியே வணக்கம்.
எங்கும் அலைந்து திரிந்து கிடப்பினும்,
ஏதிலி வாழ்வில் உதிரம் வடிப்பினும்
எங்கள் மொழிக்கொரு புதுவளம் சேர்ப்போம்
எண்ணமெல்லாம் தமிழென வாழ்வோம்
-கவிஞர் சேரன்
இந்த விருது வழங்கல் பற்றி பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் கூறுகிறார் -
உலகளாவிய ரீதியில் இந்த நாவல் வாசகர்களை சென்றடைந்தால், சிறந்த படைப்புக்களை சீர்தூக்கிப்பார்தது, விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல் சென்றடைய ஆவன செய்தால் , நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும்.
பி.எச். அப்துல் ஹமீட் ('கரையைத் தேடும் கட்டுமரங்கள் - நாவலுக்கான முன்னுரையில்)
தமிழ்கூறும் நல்லுலகெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த தமிழ் அறிவிப்பாளரின் மேற்குறித்த வார்த்தைகள் நிஜமாகியிருக்கின்றன. 2002ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப்படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு 'அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு' வழங்கிவரும் அமுதன் அடிகள் அறக்கட்டளையினர், முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நூலுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது.
கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' என்ற நாவலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைக்கிறது.
இம்மாதம் 26ந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ற் அரங்கில் நடைபெறும் விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களால் இவ்விருது வழங்கப்படுகின்றது.
இந்திய ருபாய 15 ஆயிரம் உள்ளிட்ட இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில்
தோப்பில் முகமது மீரான் (1996)
வல்லிக்கண்ணன் (1997)
இந்திரா பார்த்தசாரதி (1998)
நாஞ்சில் நாடன் (1999)
பூமணி (2000)
இமயம் (2001)
மேலாண்மை பொன்னுசாமி (2002)
பாமா (2003)
பெருமாள் முருகன் (2004)
எஸ்.வி. ராஜதுரை (2005) (படம் இல்லை)
கவிஞர் சல்மா (2006)
ஜோ டி குரூஸ் (2007)
சோ.தர்மன் (2008)
ஆகியோர் இந்த விருதைப்பெற்றிருக்கிறார்கள்.
தஞ்சாவூரில் நடைபெறும் 'அமுதன் அடிகள் அஙக்கட்டளை' இலக்கிய விருதுவிழாவில், 2008 ம் ஆண்டுக்;கான விருதை பிரபல நாவலாசிரியர் சோ.தர்மன் அவர்களும், 2009ம் அண்டுக்கான விருதை கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனும், 2010ம் அண்டுக்கான விருதை பிரபல நாடகாசிரியர் முத்துவேலழகள் அவர்களும் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்தவிழாவில் நேரடியாக கலந்து கொள்ளமுடியவில்லை. எனது சார்பில் எனது மருகர் துஷான் கலந்துகொண்டு, விருது, பட்டயம் எனபனவற்றை பெற்றதோடு எனது நன்றி உரையை வாசித்தார்.
எனது உரை இதோ-
அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.
அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை நிறுவனம் வருடந்தோறும் இலக்கிய படைப்புக்களுக்கு வழங்கி கௌரவித்துவரும் அமுதன் அடிகள் இலக்கியப் பரிசை இதுவரை பெற்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் வரிசை என்னைப் பிரமிக்கவைத்தது. அவர்கள் அனைவருமே என் ஆதர்சத்துக்குரியவர்கள்.
இலங்கையில் பிறந்து, புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது முதலாவது நாவலான, கரையைத்தேடும் கட்டுமரங்கள் 2009 ஆண்டிற்கான அமுதன் அடிகள் இலக்கியப் பரிசை பெறுகின்ற செய்தி எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை தந்தது.
இன்றைய விழாவில் நான் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலையில், இந்த விழாவின் காரணகர்த்தாவான அமுதன் அடிகளுக்கும், கலந்துகொள்ளும், அத்தனை தமிழ் நெஞ்சங்;களுக்கும், அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளையினருக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று கௌரவப்படுத்தப்படும் மற்றைய இரு படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
இறுதியாக எனக்குப் பிடித்த ஒரு பாடல் வரிகள்
பூமியின் அழகே பரிதியின் சுடரே
பொறுமையின் வடிவே தமிழே
நாநிலம் பரவ நம் நாவினில் மலர்வாய்
நற்றமிழ் மொழியே வணக்கம்.
எங்கும் அலைந்து திரிந்து கிடப்பினும்,
ஏதிலி வாழ்வில் உதிரம் வடிப்பினும்
எங்கள் மொழிக்கொரு புதுவளம் சேர்ப்போம்
எண்ணமெல்லாம் தமிழென வாழ்வோம்
-கவிஞர் சேரன்
Thursday, December 9, 2010
நாவல் பற்றிய இன்னமொரு விமர்சனம்
ஏற்கெனவே எனது நாவல் பற்றிய விமர்சனங்கள் -
காலச்சுவடு சஞ்சிகையில் - பி.விக்னேஸ்வரன்
தாய்வீடு பத்திரிகயில் - என்.கே.மகாலிங்கம்
இணையத்தில் குரு அரவிந்தன், கலைஞன், வல்வை சாகரா ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
இப்பொழுது லண்டனில் இருந்து வெளிவரும் காற்றுவெளி இணையச் சஞ்சிகையிலும் எழுத்தாளர் முல்லை அமுதன் தனது விமர்சனத்தை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி
கரையைத் தேடும் கட்டுமரங்கள்
ஈழத்து நாடகக் கலைஞன் நமக்குத் தந்திருக்கிற நாவலே ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்‘ நாவலாகும். மண்ணின் மணம் மாறாது தமிழில் வந்திருக்கிற சிறப்பான நாவலை நமக்குத் தந்திருப்பவர் ‘அண்ணை றைட்‘ கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள் .
எமது யாழ்ப்பானத் தமிழை தெற்கே நகைச்சுவை நாடகம் என்கிற பேரில் கொச்சைப் படுத்திய காலத்தை மாற்றி பாசச்சுமை, நம்பிக்கை, இரை தேடும் பறவைகள், அசட்டு மாப்பிள்ளை எனப் பல நாடகங்களைத் தந்த வரணியூரான், கே.எம்.வாசகர்,சில்லையூர். செல்வராசன் வரிசையில் கே.எஸ்.பாலச்சந்திரனும் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர். அவரின் நாடகப் பயிற்சி, மக்களுடன் பண்புடன் பழகுவதின் மூலமும் மொழித்தேர்ச்சி நிரம்பப் பெற்றவராய்த் தெரிகிறார்.
305 பக்கங்களில் வடலி வெளியீடாக நம் கைகளில் தவழ்கிற இந் நாவல் பிரபல ஈழத்து பிரபல ஓவியர் ரமணியின் ஓவியம் கவர்கிறது.
வட்டார அல்லது கிராம மக்களின் உணர்வுகளை லாவகமாக கையாண்டு எழுதப்பட்ட நாவல்களிலிருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது. அ.பாலமனோகரன், செங்கைஆழியான்,செ.யோகநாதன், முல்லைமணி, காவலூர்.ஜெகநாதன், தாமரைச்செல்வி, செம்பியன் செல்வன், அ.ஸ.அப்துல்சமது, வ.அ.இராசரத்தினம், தெணியான், சொக்கன், கோகிலம்.சுப்பையா, சி.வி.வேலுப்பிள்ளை, ஞானரதன், ஞானசேகரன் போன்ற பலர் தம் மொழி சார்ந்து சிந்தித்து அந்தந்த வட்டார, கிராம வழக்குச் சொற்களை பயன்படுத்தி எழுதியவர்களாவர். அந்த வரிசையில் சற்று தூக்கலாக எழுதி நம்மிடம் பாராட்டுப் பெறுகிறார்.
ஒரு படைப்பை தருமுன் அந்த நாவல் பற்றிய சிந்தனை(கரு), அந்த மக்கள் வாழ் நிலை பற்றிய அறிவு /அனுபவம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அனுபவம் இவருக்கு கிடைத்திருக்கிறது இவர் செய்த பாக்கியமே. ராஜம்.கிருஷ்ணன் ,லக்ஸ்மி போன்றோர் அவர்கள் எழுத நினைக்கும் படைப்பு பற்றிய முழுமையான கருக்கள்/கருத்துக்கள் பூரணப்படுத்தலுடன் கதைச் சூழலுகேற்ப அந்த மக்களுடன் வாழ்ந்து எழுதுவதனால்தான் அவர்களின் படைப்புக்கள் உயிர்ப்புடன் இன்றும் வாழ்கிறது.அந்த வகையில் நமது கதாசிரியரும் தன் வானொலித் தொடர் அல்லது நட்பு கருதி அந்த மான் பாய்ந்தவெளிக் கிராமத்துக் களத்தை நாவல் மூலம் அறிமுகம் செய்கிறர்.
தணியாத தாகம் நாடகத்தின் சோமு பாத்திரம் பற்றி இப்போது நினைக்கையிலும் கண்ணில் நீர் கட்டும்.நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்.உரையாடல் தான் நம்மவரை உட்கார வைத்தது.பேச வைத்தது.ஆதலால் மண் மொழியின் வலிமை ஒரு கதையை உச்சத்திற்கு இட்டுச் செல்லும்.கரிசல் காடு மக்கள் வாழ்வை நமக்குத் தந்த இந்திய எழுத்தாளர்கள் பற்றியும் தெரியும்.இங்கு ஆசிரியரின் உரையாடல் புத்துணர்ச்சியை தந்துவிடுகிறது.
‘வாடைக்காற்று‘ நாவலுக்குப் பிறகு எனக்கு வாசிக்கக் கிடைத்த நல்ல புத்தகம். நமக்குப் பரிச்சயமான கிராமம் கண் முன்னே மீண்டும் திரைப்படம் போல நிழலாடுகிறது. மீனவக் கிராமங்களான குருநகர் ,பாசையூர், நாவாந்துறை சார் மக்களின் வாழ் நிலைகளூடு பழக்கப்பட்ட என் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் மீனவ மக்களின் வாழ்நிலை பற்றி அறிந்திருந்தாலும் வாடைக்காற்று நாவல் தந்த அனுபவத்திலிருந்து சற்று மாறுதலான அனுபவ வெளிப்பாடுகளை இந் நாவலில் காணமுடிகிறது.
ஒரு கிராமம் தன் அகச் சூழலுடன் வாழ வேண்டுமெனில் புறச் சூழல் இயல்புடன் இருக்க வேண்டும். இங்கு புறச் சூழல் நன்றாக அமையாது விட்டதனால் ஆசிரியர் நகர்த்திச் செல்கிற கிராமம் (மான் பாய்ஞ்ச வெளி ) இன்று இல்லை என்றே சொல்லலாம்.
மொழி பற்றிய தெளிவு படைப்பாளிக்கு இருத்தல் வேண்டும். அந்த மொழி ஊடாக கொண்டு வரப்படுகின்ற படைப்பு பற்றிய அறிவு வாசகனுக்கு இருக்கும் பட்சத்திலேயே வெற்றி பெற்றதாய் அப் படைப்பு அமையும்.
தகழியின் செம்மீன், தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோரத்துக் கிராமத்தின் கதை‘ எர்னஷ்ட் ஹெமிங்க்வேயின் ‘கடவுளும் மனிதனும்‘ நாவல்களின் வாசிப்பு அனுபவம் நம் கண் முன்னே பல தகவல்களை தந்திருந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுடன் பல ஆண்டுகள் கழிந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற உணர்வே ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள் ‘ நாவல் வாசிக்கும் போது ஏற்படுகிறது.
எழுதுபவன் முதலில் மொழியை நேசிக்க வேண்டும். அப்போது தான் அதன் ஆளுமை எழுத்தில் வெளிப்படுவது நிஜம். அத்தகைய நேசிப்பு நாவலில் தெரிகிறது.
ஒவ்வொரு கிராமத்துள்ளும் மனித மனங்களிடையே இடம் பெறும் போராட்டங்களை மெல்லிய காதல் உணர்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு வழிப்பாதையாக அடைப்புக்குறியுடன் எதிர்பார்க்கப்பட்ட நமது இலக்கியத்தை தமிழ் தெரிந்த வாசகர் பரப்பை உள் வாங்கியபடி நகர்கிற நமது இலக்கியத்தை தாங்கிச் செல்பவர்கள் நமது எழுத்தாளர்களே .அதிகமான எழுத்தாளர் பரம்பரையை உருவாக்கித் தந்திருக்கிறது 83 இனக்கலவரம். புதிய உலக சிந்தனைகளை, உலக மொழிகளை பரிச்சயப்படுதுகிற அளவிற்கு நம்மவர்கள் முன்னேறியுள்ள நமது உலகம் விசாலித்து நிற்பது கூட பதிப்பாளர்கள் நம் பக்கம் திரும்பி உள்ளார்கள். இப்போது வழக்குச் சொற்கள் அவர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தவில்லை. எம் போராட்டம் மீதான அவர்களின் நம்பிக்கை இன்னும் நம்முடன், நம் மொழியுடன் கலக்கின்ற தேவையும் ஏற்பட இரு வழித் தொடர்பு இலக்கியமாக இலகுவாக்கப்படுள்ளது.
மீனவக் கிராமங்களில் தெரிந்தோ ,தெரியாமலோ தொழில் நிமித்தமாகவும், கலையின் நிமித்தமும், கே.எஸ்.பாலச்சந்திரன் மக்களுடன் , மக்களின் வாழ்வு பற்றிய அனுபவம் , அவர்களின் மீதான ஈடுபாடு அவருக்குள் உருவான எழுதுருவம் நல்ல நாவலை நமகுத் தந்திருகிறது..
ஒரு பயிற்சி பெற்ற நாவலாசிரியனது எழுத்து நடை கைவரப் பட்டவராய் ஜமாய்த்திருக்கிறார். மனதில் நிற்கின்ற பாத்திரங்கள் ,தெரிந்த மொழிநடை நம்மை வசிகரிக்கிறது.
வியளம், தொம்மைக்கிழவன், கிடுகு,குசினி, இரணை,உசிர், சூள்லாம்பு வெளிச்சம், தட்டி வான், இஞ்சேர், குஞ்சியப்பு, சொதி, குமர்ப்பெட்டை, கடுக்கண், விசர் பெடல்களை, கேட்டனீ, பானாக்கத்தி, தேத்தண்ணி, மொக்குத்தனம், விறைக்கும், கெக்கட்டம், பொத்தல், நத்தார், கிடக்குது, திட்டி, கைலேஞ்சி,அம்பிடுதல், அலம்பல்வேலி, சம்மாட்டி, கொப்பா, தீத்தி, கவாட்டி, சாரம், இப்படி அனேக சொற்கள் நாம் மறந்து விடாதபடி கையாளப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டும்.மனவலிமை, சிதறாத சிந்தனை உள்ள ஒருவனால்த் தான் தன் நிலை பதறாமல் எழுத முடிந்திருக்கிறது. புலம் பெயர்ந்த பின்னும் வார்த்தைகளை மறக்காமல் தொட்டிருப்பது வாழ்த்த வேண்டும்.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மக்கள் இல்லாததால் இடம் பெயர்ந்த மக்களின் வாழ் நிலையும் மாறுபட்டிருக்கும்.எனவே, இந் நாவல் ஒரு ஆவணமாகவும், ஒரு காலத்து வரலாறாகவும் கொள்ளலாம்.
அந் நாட்களில் யாழ் பஸ் நிலைய ஒலிபரப்புகளில்(பெஸ்டோன்,மணிக்குரல்)அடிக்கடி ஒலிபரப்பாகிய ‘அண்ணை றைட்‘ தனி நடிப்பு நாடகம் பின் நாளில் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது.நெல்லை.க.பேரன்,கே.எம்.வாசகர், சில்லையூர்.செல்வராஜன் ,வரணியூரான் போன்றவர்களின் பேச்சு மொழி மீதான அபிமானம் அவர்களின் நாடகங்களில் பிரதிபலித்தது.அதன் எதிரொலியே அவர்களின் நாடகப்பிணைப்பு அல்லது நட்பு பாலச்சந்திரனையும் ஆகர்சிக்க வைத்தது போலும்.நாவல் முழுவதும் பயிற்சி தெரிகிறது.எனக்குத் தெரிந்த வரையில் ‘சிலோன்‘ விஜயேந்திரன்,பாலா இருவருமே சிறப்பாக தங்கள் தனி நடிப்பால் ரசிகர்களின் மனதினைக் கவர்ந்தவர்.
தொண்டமானாறு, வளலாய்,பலாலி,மாதகல் என கிராமங்களின் கடற்கரைப் பிரதேசங்களின் வாழ் நிலை பற்றிய அனுபவம் பரிச்சயமானது தான். எனினும் கிளாலி கடற்பயணம் தந்த பயங்கர அனுபவமே அடிக்கடி வந்து தொந்தரவு கொடுப்பதால் நாம் நம்மை சுதாகரித்து எழுபதில் வாழ்ந்த மக்களின் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல மனதை ஒரு நிலைப் படுத்த வேண்டியுள்ளது
களச் சூழல் தற்போது போல இல்லை என்பதற்காக அக்கால சூழலை புறம் தள்ளி விட முடியாது. கிராமியச் சூழலிலான திரைப்படங்களைப் பார்க்கும் வேளையில் கண்ணில் நீர் கட்டும்.அந்தச் சூழல், மக்கள் ,அவர்களின் உறவு முறைகள்,,ஆடு,மாடு, வண்டில்கள், மரங்கள்,கார் என நம்மை அந்த உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்.கூடவே,அந்த சுகானுபவத்தை அனுபவிக்க முடியாதபடி ஆக்கிய இந்திய அரசு மீதும் கோபம் வந்துவிடுகிறது.இந் நாவலின் களச் சூழல் முன்னைப் போல் இல்லை என்கிற போது எவர் மீதோவெல்லாம் கோபம் வருவது தவிர்க்க முடியாதுள்ளது..
ஆசிரியரின் கற்பனைக்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
‘வர்ணக் கலவைகளின் அழகு இயற்கையெனும் அற்புத சைத்திரீயனின் கை வண்ணமாக கருநீல வண்ணம், பச்சை, மெல்லிய மஞ்சள் நிறங்களில் நீளத்துக்கு நீருக்கு அடியில் படர்ந்து, ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும், புதிதாகப் பார்ப்பது போன்ற உணர்வுடன் பிரமிக்க வைக்கும் அந்த அழகை , பல நாளவன் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறான்.முருகைக் கற்களுக்கு மேல் தாவரம் போல் படர்ந்திருக்கும் பவளப் பாறைகள், சூரிய ஒளி பட்டு ‘தக தக‘ என்று மின்னும்….’
‘மீட்டிப் பார்க்கப்பட்டுபின், தந்தி அறுத்து ,தூசிபடிந்ததாய், ஸ்பரிஸம் படாததாய் இருந்த வீணைக்கு புதுத்தந்திகள் பொருத்தி, ஆனந்தராகம் மீட்டினான் அந்தோனி.மோகக்கடலில் முட்டி மோதும் உணர்ச்சிப் பெருக்கில் அறிவிழந்து அந்த இழப்பே பிறிதோர் வெற்றியாக அவனோடு ஒருமித்த நிலையில் ஸ்ரெல்லா அவர்களை அவர்கள் பாட்டில் விட்டு விட்டு காலக்கனிகள் வேகமாக உதிர்ந்து வீழ்ந்தன.’
‘விழுந்திருந்த அந்தத் தென்னங்குற்றியில் அமர்ந்து கொண்ட அந்தோனியை, காற்றினால் மெதுவாக அசைக்கப்படும் தென்னோலையின் கீற்றுக்களைடையே புகுந்து வரும் நிலவொளி அடிக்கடி காட்டிக்கொடுத்தது.வினாடிகளின் கழிவே நீண்ட காலத்துகள்களின் பயணமாக அவன் உணர்ந்து அடிக்கடி தலையை திருப்பி ஆஸ்பத்திரியிலிருந்து வரும் பாதையில் தாபத்துடன் விழி பதித்து இதயம் படபடக்க அமர்ந்திருந்தான்‘.
70-80 களில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் போது வீரகேசரி, மாணிக்கம், கலாவல்லி, சிரித்திரன் போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலக்கிய பிரசுரங்களை வெளியிடத் தொடங்கின. மக்களின் அவலங்களை அவரவர் மொழியில் சொல்ல முனைந்தன. ஆங்காங்கே சிறு சிறு வெளியீட்டு முயற்சிகளும் வராமல் இல்லை. அப்போதிருந்தே நம் இலக்கியங்கள் நம்மையே திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம். அப்போது இந் நாவல் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும், எப்படி ஹிரோஷிமாவின் அவலம் திரும்பத் திரும்ப சொல்லப் பட வேண்டுமோ நமது வாழ்வியல் முறைகளும் அவ்வப்போது எழுதப்பபடல் வேண்டும் தான். அந்த வகையில் இந் நாவல் தேவையான ஒன்றாக அமைகிறது.
இன்றைய அரசியல் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரப் போக்கால் பல கிராமங்கள் எனி மறக்கபட்டும் விடலாம். அதற்காக இப்படியான ஆவணங்கள் நமக்குத் தேவையாகவும் உள்ளது.
வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையேயான உறவு சீராக இருப்பின் இரு தரப்பும் உற்சாகமாய் புரிந்துணர்வு கொள்ள முடியும்.
முதற் காதல் மறுக்கப் பட்டாலே ஒருவன் முனிவனாகிவிடுகிறான்.பட்டுப்போன காதல் உணர்வு இன்னொரு பெண்ணின் நெருங்குதலோடு துளிர்க்கும் என்றிருக்கையில் இரண்டாவது காதலுக்கும் தடங்கல் ஏற்பட்டு விடுகிறது. அவனது தந்தையின் ‘அந்த ‘ தேவைகளுக்காக வைத்திருந்தவளின்(சின்னவீடு?) மகளை ஏற்றுக் கொள்ள தந்தையும் விரும்பவில்லை. கூடவே, காலம் சென்ற அவளது கணவனின் தம்பியுடன் பார்த்த பின் ஏற்பட்ட சந்தேகமும் அவளிடமிருந்து அவனை தூரமாக்குகிறது. காலச் சுழற்சியில் அவன் பணக்கார சம்மட்டியாரின் மகளை மணக்க நேர்ந்தாலும் மணைவியாக வந்தவளின் திமிர்ப் போக்கு அவனுக்கு வசந்தம் இல்லாத வாழ்வை நினைத்து துடித்துப் போகிறான். காலமும் அவலப் பட்டவர்களை நோக்கியே தன் அஸ்திரத்தை வீசும் என்பது கண்கூடு.
மனிதர்களின் பெயர்களின் கிராமியம் நட்சத்திரம்,தங்கப் பவுண் எனும் பெயர்களில் தெரிகிறது.
அந்தோனி, செல்வராணி, ஸ்டெல்லா, சில்வியா என அவனைச் சுற்றி படர்கின்ற பெண்கள். எனினும், கிளைப் பாத்திரங்களாக நிறையப் பேர் வந்து போகின்றனர். நாவலில் காதலுடன், பாசம், நட்பு, பொறுப்புணர்வு என்பனவும் மனதைத் தொடும் வண்ணம் பாத்திரங்களூடாக காட்டுகிறார்.பிசகாத பாத்திரப் படைப்பு நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
காதல் அனேகமாக சோக முடிவையே தந்து விடுகிறது.குறிப்பாக கதைகளில் வாசகர்களின் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்யவெண்ணியோ என்னவோ எழுதியும் விடுகிறார்கள்.அந்த தொழில் நுட்பம் தெரிகிறது நாவலில்..
‘கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ?
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒரு நாள் போவார்!
ஒரு நாள் வருவார்!!
ஒவ்வொரு நாளும் துயரம்.
ஒரு ஞாண் வயிறை வளர்ப்பவர்
உயிரை-
ஊரார் நினைப்பது சுலபம்!!’
பாடல் ஞாபகத்துக்கு வருகிறது.
செம்மீனில் காட்டப்பட்ட அதே சோகம், இரக்கம், ஏமாற்றம், இழப்பு நாவலில் காட்டப் பட்டாலும் நமது கிராமத்துக் களம் சொல்லி நிற்கின்ற செய்திகள் ஏராளம்.
மனதைத் தொடுகின்ற சில வார்த்தைப் பிரயோகங்கள் அற்புதமானவை. ‘காதல் என்பது புத்தி உள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப் பயில்வானை நிஜப் பயில்வானாக்கி, பலசாலியை உருக்குலைத்து இப்படி எல்லாம் ரசவாத வித்தை இயற்றும் வல்லமை வாய்ந்தது தானே!
ரசிக்கும் படியாக உள்ளது.நெல்லை.க.பேரனிடம் கற்றுக் கொண்டாரோ? ‘என்னைக் கொல்லப் போறியே..கொல்லு..கொண்டு போட்டு எவளோ ஒருத்தியை வைச்சிருக்கிறியாமே..அவளோடை போய் இரு..’மனைவி சில்வியாவின் கோபப் பேச்சு.
‘பொத்தடி வாயை‘-இது கணவன்.
‘நான் கத்துவன்..ஊர் அறியக் கத்திச் சொல்லுவன்‘
மரணம் என்பதும் விடுதலை தானே! துன்பங்களிலிருந்து ,அவற்றுக்கு காரணமான உறவுப் பந்தங்களிலிருந்து விடுதலை! சுடலையைத் தாண்டிச் சென்றவுடன் சுடலை ஞானமும் வந்த வழியில் சென்று விடுகிறது…’
சாதாரண கூலிக்காரனாக தொடங்கி, சம்மட்டியாக வரும் வரைக்கும்,என்னோடை எல்லாக் கஷ்டங்களையும் தாங்கி வாழ்ந்த என்ரை மதலேனாவே இல்லையம்…இதுகள் போனாலென்ன அந்தோனி…’
இராயப்புவின் பெண்சாதி தன்னை விட இரண்டு மடங்கு கனமான தாலி கழுத்தை அலங்கரிக்காட்டியல், காசுமாலை என்று அலங்கார பூஷிதையாக உலாவியதும், மாப்பிள்ளை பக்கத்தாரை விட தங்கடை ஆட்கள் பெரியாக்கள் எண்ட மாதிரி ‘அவையளை‘ விழுந்து விழுந்து உபசரித்ததும், சம்பந்தி மீது மதலேனாளுக்கு எரிச்சலையே உண்டாக்கியிருந்தது…’
‘கதைசொல்லி‘ பாலச்சந்திரனின் பலமும், பலவீனமும் தென்பட்டாலும் நேர்த்தியான கதையைத் தந்ததிற்கு நன்றிகளும் பாராட்டுதலையும் தந்துதானாக வேண்டும்.இன்னுமொரு வரலாற்று ஆவணத்தை பதிவாக்கி தருவதில் முனைப்புக் காட்ட வேண்டும்.அது முள்ளிவாய்க்காலாகவும் இருக்கலாம்.
பல வருடங்களின் பின்னர் இலங்கை வரைபடத்தில் தேடப் படுகின்ற ‘மான் பாஞ்ச வெளி‘ போல் முள்ளி வாய்க்காலும் விடுபட்டு போயிருக்கலாம்.எதிர் பார்த்தபடி…
இந் நூலை வெளியிட்ட ‘வடலி‘ வெளியீட்டகத்தாருக்கும் எமது நன்றி.
-கவிஞர் முல்லைஅமுதன்-
காலச்சுவடு சஞ்சிகையில் - பி.விக்னேஸ்வரன்
தாய்வீடு பத்திரிகயில் - என்.கே.மகாலிங்கம்
இணையத்தில் குரு அரவிந்தன், கலைஞன், வல்வை சாகரா ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
இப்பொழுது லண்டனில் இருந்து வெளிவரும் காற்றுவெளி இணையச் சஞ்சிகையிலும் எழுத்தாளர் முல்லை அமுதன் தனது விமர்சனத்தை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி
கரையைத் தேடும் கட்டுமரங்கள்
ஈழத்து நாடகக் கலைஞன் நமக்குத் தந்திருக்கிற நாவலே ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்‘ நாவலாகும். மண்ணின் மணம் மாறாது தமிழில் வந்திருக்கிற சிறப்பான நாவலை நமக்குத் தந்திருப்பவர் ‘அண்ணை றைட்‘ கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள் .
எமது யாழ்ப்பானத் தமிழை தெற்கே நகைச்சுவை நாடகம் என்கிற பேரில் கொச்சைப் படுத்திய காலத்தை மாற்றி பாசச்சுமை, நம்பிக்கை, இரை தேடும் பறவைகள், அசட்டு மாப்பிள்ளை எனப் பல நாடகங்களைத் தந்த வரணியூரான், கே.எம்.வாசகர்,சில்லையூர். செல்வராசன் வரிசையில் கே.எஸ்.பாலச்சந்திரனும் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர். அவரின் நாடகப் பயிற்சி, மக்களுடன் பண்புடன் பழகுவதின் மூலமும் மொழித்தேர்ச்சி நிரம்பப் பெற்றவராய்த் தெரிகிறார்.
305 பக்கங்களில் வடலி வெளியீடாக நம் கைகளில் தவழ்கிற இந் நாவல் பிரபல ஈழத்து பிரபல ஓவியர் ரமணியின் ஓவியம் கவர்கிறது.
வட்டார அல்லது கிராம மக்களின் உணர்வுகளை லாவகமாக கையாண்டு எழுதப்பட்ட நாவல்களிலிருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது. அ.பாலமனோகரன், செங்கைஆழியான்,செ.யோகநாதன், முல்லைமணி, காவலூர்.ஜெகநாதன், தாமரைச்செல்வி, செம்பியன் செல்வன், அ.ஸ.அப்துல்சமது, வ.அ.இராசரத்தினம், தெணியான், சொக்கன், கோகிலம்.சுப்பையா, சி.வி.வேலுப்பிள்ளை, ஞானரதன், ஞானசேகரன் போன்ற பலர் தம் மொழி சார்ந்து சிந்தித்து அந்தந்த வட்டார, கிராம வழக்குச் சொற்களை பயன்படுத்தி எழுதியவர்களாவர். அந்த வரிசையில் சற்று தூக்கலாக எழுதி நம்மிடம் பாராட்டுப் பெறுகிறார்.
ஒரு படைப்பை தருமுன் அந்த நாவல் பற்றிய சிந்தனை(கரு), அந்த மக்கள் வாழ் நிலை பற்றிய அறிவு /அனுபவம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அனுபவம் இவருக்கு கிடைத்திருக்கிறது இவர் செய்த பாக்கியமே. ராஜம்.கிருஷ்ணன் ,லக்ஸ்மி போன்றோர் அவர்கள் எழுத நினைக்கும் படைப்பு பற்றிய முழுமையான கருக்கள்/கருத்துக்கள் பூரணப்படுத்தலுடன் கதைச் சூழலுகேற்ப அந்த மக்களுடன் வாழ்ந்து எழுதுவதனால்தான் அவர்களின் படைப்புக்கள் உயிர்ப்புடன் இன்றும் வாழ்கிறது.அந்த வகையில் நமது கதாசிரியரும் தன் வானொலித் தொடர் அல்லது நட்பு கருதி அந்த மான் பாய்ந்தவெளிக் கிராமத்துக் களத்தை நாவல் மூலம் அறிமுகம் செய்கிறர்.
தணியாத தாகம் நாடகத்தின் சோமு பாத்திரம் பற்றி இப்போது நினைக்கையிலும் கண்ணில் நீர் கட்டும்.நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்.உரையாடல் தான் நம்மவரை உட்கார வைத்தது.பேச வைத்தது.ஆதலால் மண் மொழியின் வலிமை ஒரு கதையை உச்சத்திற்கு இட்டுச் செல்லும்.கரிசல் காடு மக்கள் வாழ்வை நமக்குத் தந்த இந்திய எழுத்தாளர்கள் பற்றியும் தெரியும்.இங்கு ஆசிரியரின் உரையாடல் புத்துணர்ச்சியை தந்துவிடுகிறது.
‘வாடைக்காற்று‘ நாவலுக்குப் பிறகு எனக்கு வாசிக்கக் கிடைத்த நல்ல புத்தகம். நமக்குப் பரிச்சயமான கிராமம் கண் முன்னே மீண்டும் திரைப்படம் போல நிழலாடுகிறது. மீனவக் கிராமங்களான குருநகர் ,பாசையூர், நாவாந்துறை சார் மக்களின் வாழ் நிலைகளூடு பழக்கப்பட்ட என் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் மீனவ மக்களின் வாழ்நிலை பற்றி அறிந்திருந்தாலும் வாடைக்காற்று நாவல் தந்த அனுபவத்திலிருந்து சற்று மாறுதலான அனுபவ வெளிப்பாடுகளை இந் நாவலில் காணமுடிகிறது.
ஒரு கிராமம் தன் அகச் சூழலுடன் வாழ வேண்டுமெனில் புறச் சூழல் இயல்புடன் இருக்க வேண்டும். இங்கு புறச் சூழல் நன்றாக அமையாது விட்டதனால் ஆசிரியர் நகர்த்திச் செல்கிற கிராமம் (மான் பாய்ஞ்ச வெளி ) இன்று இல்லை என்றே சொல்லலாம்.
மொழி பற்றிய தெளிவு படைப்பாளிக்கு இருத்தல் வேண்டும். அந்த மொழி ஊடாக கொண்டு வரப்படுகின்ற படைப்பு பற்றிய அறிவு வாசகனுக்கு இருக்கும் பட்சத்திலேயே வெற்றி பெற்றதாய் அப் படைப்பு அமையும்.
தகழியின் செம்மீன், தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோரத்துக் கிராமத்தின் கதை‘ எர்னஷ்ட் ஹெமிங்க்வேயின் ‘கடவுளும் மனிதனும்‘ நாவல்களின் வாசிப்பு அனுபவம் நம் கண் முன்னே பல தகவல்களை தந்திருந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுடன் பல ஆண்டுகள் கழிந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற உணர்வே ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள் ‘ நாவல் வாசிக்கும் போது ஏற்படுகிறது.
எழுதுபவன் முதலில் மொழியை நேசிக்க வேண்டும். அப்போது தான் அதன் ஆளுமை எழுத்தில் வெளிப்படுவது நிஜம். அத்தகைய நேசிப்பு நாவலில் தெரிகிறது.
ஒவ்வொரு கிராமத்துள்ளும் மனித மனங்களிடையே இடம் பெறும் போராட்டங்களை மெல்லிய காதல் உணர்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு வழிப்பாதையாக அடைப்புக்குறியுடன் எதிர்பார்க்கப்பட்ட நமது இலக்கியத்தை தமிழ் தெரிந்த வாசகர் பரப்பை உள் வாங்கியபடி நகர்கிற நமது இலக்கியத்தை தாங்கிச் செல்பவர்கள் நமது எழுத்தாளர்களே .அதிகமான எழுத்தாளர் பரம்பரையை உருவாக்கித் தந்திருக்கிறது 83 இனக்கலவரம். புதிய உலக சிந்தனைகளை, உலக மொழிகளை பரிச்சயப்படுதுகிற அளவிற்கு நம்மவர்கள் முன்னேறியுள்ள நமது உலகம் விசாலித்து நிற்பது கூட பதிப்பாளர்கள் நம் பக்கம் திரும்பி உள்ளார்கள். இப்போது வழக்குச் சொற்கள் அவர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தவில்லை. எம் போராட்டம் மீதான அவர்களின் நம்பிக்கை இன்னும் நம்முடன், நம் மொழியுடன் கலக்கின்ற தேவையும் ஏற்பட இரு வழித் தொடர்பு இலக்கியமாக இலகுவாக்கப்படுள்ளது.
மீனவக் கிராமங்களில் தெரிந்தோ ,தெரியாமலோ தொழில் நிமித்தமாகவும், கலையின் நிமித்தமும், கே.எஸ்.பாலச்சந்திரன் மக்களுடன் , மக்களின் வாழ்வு பற்றிய அனுபவம் , அவர்களின் மீதான ஈடுபாடு அவருக்குள் உருவான எழுதுருவம் நல்ல நாவலை நமகுத் தந்திருகிறது..
ஒரு பயிற்சி பெற்ற நாவலாசிரியனது எழுத்து நடை கைவரப் பட்டவராய் ஜமாய்த்திருக்கிறார். மனதில் நிற்கின்ற பாத்திரங்கள் ,தெரிந்த மொழிநடை நம்மை வசிகரிக்கிறது.
வியளம், தொம்மைக்கிழவன், கிடுகு,குசினி, இரணை,உசிர், சூள்லாம்பு வெளிச்சம், தட்டி வான், இஞ்சேர், குஞ்சியப்பு, சொதி, குமர்ப்பெட்டை, கடுக்கண், விசர் பெடல்களை, கேட்டனீ, பானாக்கத்தி, தேத்தண்ணி, மொக்குத்தனம், விறைக்கும், கெக்கட்டம், பொத்தல், நத்தார், கிடக்குது, திட்டி, கைலேஞ்சி,அம்பிடுதல், அலம்பல்வேலி, சம்மாட்டி, கொப்பா, தீத்தி, கவாட்டி, சாரம், இப்படி அனேக சொற்கள் நாம் மறந்து விடாதபடி கையாளப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டும்.மனவலிமை, சிதறாத சிந்தனை உள்ள ஒருவனால்த் தான் தன் நிலை பதறாமல் எழுத முடிந்திருக்கிறது. புலம் பெயர்ந்த பின்னும் வார்த்தைகளை மறக்காமல் தொட்டிருப்பது வாழ்த்த வேண்டும்.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மக்கள் இல்லாததால் இடம் பெயர்ந்த மக்களின் வாழ் நிலையும் மாறுபட்டிருக்கும்.எனவே, இந் நாவல் ஒரு ஆவணமாகவும், ஒரு காலத்து வரலாறாகவும் கொள்ளலாம்.
அந் நாட்களில் யாழ் பஸ் நிலைய ஒலிபரப்புகளில்(பெஸ்டோன்,மணிக்குரல்)அடிக்கடி ஒலிபரப்பாகிய ‘அண்ணை றைட்‘ தனி நடிப்பு நாடகம் பின் நாளில் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது.நெல்லை.க.பேரன்,கே.எம்.வாசகர், சில்லையூர்.செல்வராஜன் ,வரணியூரான் போன்றவர்களின் பேச்சு மொழி மீதான அபிமானம் அவர்களின் நாடகங்களில் பிரதிபலித்தது.அதன் எதிரொலியே அவர்களின் நாடகப்பிணைப்பு அல்லது நட்பு பாலச்சந்திரனையும் ஆகர்சிக்க வைத்தது போலும்.நாவல் முழுவதும் பயிற்சி தெரிகிறது.எனக்குத் தெரிந்த வரையில் ‘சிலோன்‘ விஜயேந்திரன்,பாலா இருவருமே சிறப்பாக தங்கள் தனி நடிப்பால் ரசிகர்களின் மனதினைக் கவர்ந்தவர்.
தொண்டமானாறு, வளலாய்,பலாலி,மாதகல் என கிராமங்களின் கடற்கரைப் பிரதேசங்களின் வாழ் நிலை பற்றிய அனுபவம் பரிச்சயமானது தான். எனினும் கிளாலி கடற்பயணம் தந்த பயங்கர அனுபவமே அடிக்கடி வந்து தொந்தரவு கொடுப்பதால் நாம் நம்மை சுதாகரித்து எழுபதில் வாழ்ந்த மக்களின் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல மனதை ஒரு நிலைப் படுத்த வேண்டியுள்ளது
களச் சூழல் தற்போது போல இல்லை என்பதற்காக அக்கால சூழலை புறம் தள்ளி விட முடியாது. கிராமியச் சூழலிலான திரைப்படங்களைப் பார்க்கும் வேளையில் கண்ணில் நீர் கட்டும்.அந்தச் சூழல், மக்கள் ,அவர்களின் உறவு முறைகள்,,ஆடு,மாடு, வண்டில்கள், மரங்கள்,கார் என நம்மை அந்த உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்.கூடவே,அந்த சுகானுபவத்தை அனுபவிக்க முடியாதபடி ஆக்கிய இந்திய அரசு மீதும் கோபம் வந்துவிடுகிறது.இந் நாவலின் களச் சூழல் முன்னைப் போல் இல்லை என்கிற போது எவர் மீதோவெல்லாம் கோபம் வருவது தவிர்க்க முடியாதுள்ளது..
ஆசிரியரின் கற்பனைக்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
‘வர்ணக் கலவைகளின் அழகு இயற்கையெனும் அற்புத சைத்திரீயனின் கை வண்ணமாக கருநீல வண்ணம், பச்சை, மெல்லிய மஞ்சள் நிறங்களில் நீளத்துக்கு நீருக்கு அடியில் படர்ந்து, ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும், புதிதாகப் பார்ப்பது போன்ற உணர்வுடன் பிரமிக்க வைக்கும் அந்த அழகை , பல நாளவன் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறான்.முருகைக் கற்களுக்கு மேல் தாவரம் போல் படர்ந்திருக்கும் பவளப் பாறைகள், சூரிய ஒளி பட்டு ‘தக தக‘ என்று மின்னும்….’
‘மீட்டிப் பார்க்கப்பட்டுபின், தந்தி அறுத்து ,தூசிபடிந்ததாய், ஸ்பரிஸம் படாததாய் இருந்த வீணைக்கு புதுத்தந்திகள் பொருத்தி, ஆனந்தராகம் மீட்டினான் அந்தோனி.மோகக்கடலில் முட்டி மோதும் உணர்ச்சிப் பெருக்கில் அறிவிழந்து அந்த இழப்பே பிறிதோர் வெற்றியாக அவனோடு ஒருமித்த நிலையில் ஸ்ரெல்லா அவர்களை அவர்கள் பாட்டில் விட்டு விட்டு காலக்கனிகள் வேகமாக உதிர்ந்து வீழ்ந்தன.’
‘விழுந்திருந்த அந்தத் தென்னங்குற்றியில் அமர்ந்து கொண்ட அந்தோனியை, காற்றினால் மெதுவாக அசைக்கப்படும் தென்னோலையின் கீற்றுக்களைடையே புகுந்து வரும் நிலவொளி அடிக்கடி காட்டிக்கொடுத்தது.வினாடிகளின் கழிவே நீண்ட காலத்துகள்களின் பயணமாக அவன் உணர்ந்து அடிக்கடி தலையை திருப்பி ஆஸ்பத்திரியிலிருந்து வரும் பாதையில் தாபத்துடன் விழி பதித்து இதயம் படபடக்க அமர்ந்திருந்தான்‘.
70-80 களில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் போது வீரகேசரி, மாணிக்கம், கலாவல்லி, சிரித்திரன் போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலக்கிய பிரசுரங்களை வெளியிடத் தொடங்கின. மக்களின் அவலங்களை அவரவர் மொழியில் சொல்ல முனைந்தன. ஆங்காங்கே சிறு சிறு வெளியீட்டு முயற்சிகளும் வராமல் இல்லை. அப்போதிருந்தே நம் இலக்கியங்கள் நம்மையே திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம். அப்போது இந் நாவல் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும், எப்படி ஹிரோஷிமாவின் அவலம் திரும்பத் திரும்ப சொல்லப் பட வேண்டுமோ நமது வாழ்வியல் முறைகளும் அவ்வப்போது எழுதப்பபடல் வேண்டும் தான். அந்த வகையில் இந் நாவல் தேவையான ஒன்றாக அமைகிறது.
இன்றைய அரசியல் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரப் போக்கால் பல கிராமங்கள் எனி மறக்கபட்டும் விடலாம். அதற்காக இப்படியான ஆவணங்கள் நமக்குத் தேவையாகவும் உள்ளது.
வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையேயான உறவு சீராக இருப்பின் இரு தரப்பும் உற்சாகமாய் புரிந்துணர்வு கொள்ள முடியும்.
முதற் காதல் மறுக்கப் பட்டாலே ஒருவன் முனிவனாகிவிடுகிறான்.பட்டுப்போன காதல் உணர்வு இன்னொரு பெண்ணின் நெருங்குதலோடு துளிர்க்கும் என்றிருக்கையில் இரண்டாவது காதலுக்கும் தடங்கல் ஏற்பட்டு விடுகிறது. அவனது தந்தையின் ‘அந்த ‘ தேவைகளுக்காக வைத்திருந்தவளின்(சின்னவீடு?) மகளை ஏற்றுக் கொள்ள தந்தையும் விரும்பவில்லை. கூடவே, காலம் சென்ற அவளது கணவனின் தம்பியுடன் பார்த்த பின் ஏற்பட்ட சந்தேகமும் அவளிடமிருந்து அவனை தூரமாக்குகிறது. காலச் சுழற்சியில் அவன் பணக்கார சம்மட்டியாரின் மகளை மணக்க நேர்ந்தாலும் மணைவியாக வந்தவளின் திமிர்ப் போக்கு அவனுக்கு வசந்தம் இல்லாத வாழ்வை நினைத்து துடித்துப் போகிறான். காலமும் அவலப் பட்டவர்களை நோக்கியே தன் அஸ்திரத்தை வீசும் என்பது கண்கூடு.
மனிதர்களின் பெயர்களின் கிராமியம் நட்சத்திரம்,தங்கப் பவுண் எனும் பெயர்களில் தெரிகிறது.
அந்தோனி, செல்வராணி, ஸ்டெல்லா, சில்வியா என அவனைச் சுற்றி படர்கின்ற பெண்கள். எனினும், கிளைப் பாத்திரங்களாக நிறையப் பேர் வந்து போகின்றனர். நாவலில் காதலுடன், பாசம், நட்பு, பொறுப்புணர்வு என்பனவும் மனதைத் தொடும் வண்ணம் பாத்திரங்களூடாக காட்டுகிறார்.பிசகாத பாத்திரப் படைப்பு நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
காதல் அனேகமாக சோக முடிவையே தந்து விடுகிறது.குறிப்பாக கதைகளில் வாசகர்களின் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்யவெண்ணியோ என்னவோ எழுதியும் விடுகிறார்கள்.அந்த தொழில் நுட்பம் தெரிகிறது நாவலில்..
‘கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ?
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒரு நாள் போவார்!
ஒரு நாள் வருவார்!!
ஒவ்வொரு நாளும் துயரம்.
ஒரு ஞாண் வயிறை வளர்ப்பவர்
உயிரை-
ஊரார் நினைப்பது சுலபம்!!’
பாடல் ஞாபகத்துக்கு வருகிறது.
செம்மீனில் காட்டப்பட்ட அதே சோகம், இரக்கம், ஏமாற்றம், இழப்பு நாவலில் காட்டப் பட்டாலும் நமது கிராமத்துக் களம் சொல்லி நிற்கின்ற செய்திகள் ஏராளம்.
மனதைத் தொடுகின்ற சில வார்த்தைப் பிரயோகங்கள் அற்புதமானவை. ‘காதல் என்பது புத்தி உள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப் பயில்வானை நிஜப் பயில்வானாக்கி, பலசாலியை உருக்குலைத்து இப்படி எல்லாம் ரசவாத வித்தை இயற்றும் வல்லமை வாய்ந்தது தானே!
ரசிக்கும் படியாக உள்ளது.நெல்லை.க.பேரனிடம் கற்றுக் கொண்டாரோ? ‘என்னைக் கொல்லப் போறியே..கொல்லு..கொண்டு போட்டு எவளோ ஒருத்தியை வைச்சிருக்கிறியாமே..அவளோடை போய் இரு..’மனைவி சில்வியாவின் கோபப் பேச்சு.
‘பொத்தடி வாயை‘-இது கணவன்.
‘நான் கத்துவன்..ஊர் அறியக் கத்திச் சொல்லுவன்‘
மரணம் என்பதும் விடுதலை தானே! துன்பங்களிலிருந்து ,அவற்றுக்கு காரணமான உறவுப் பந்தங்களிலிருந்து விடுதலை! சுடலையைத் தாண்டிச் சென்றவுடன் சுடலை ஞானமும் வந்த வழியில் சென்று விடுகிறது…’
சாதாரண கூலிக்காரனாக தொடங்கி, சம்மட்டியாக வரும் வரைக்கும்,என்னோடை எல்லாக் கஷ்டங்களையும் தாங்கி வாழ்ந்த என்ரை மதலேனாவே இல்லையம்…இதுகள் போனாலென்ன அந்தோனி…’
இராயப்புவின் பெண்சாதி தன்னை விட இரண்டு மடங்கு கனமான தாலி கழுத்தை அலங்கரிக்காட்டியல், காசுமாலை என்று அலங்கார பூஷிதையாக உலாவியதும், மாப்பிள்ளை பக்கத்தாரை விட தங்கடை ஆட்கள் பெரியாக்கள் எண்ட மாதிரி ‘அவையளை‘ விழுந்து விழுந்து உபசரித்ததும், சம்பந்தி மீது மதலேனாளுக்கு எரிச்சலையே உண்டாக்கியிருந்தது…’
‘கதைசொல்லி‘ பாலச்சந்திரனின் பலமும், பலவீனமும் தென்பட்டாலும் நேர்த்தியான கதையைத் தந்ததிற்கு நன்றிகளும் பாராட்டுதலையும் தந்துதானாக வேண்டும்.இன்னுமொரு வரலாற்று ஆவணத்தை பதிவாக்கி தருவதில் முனைப்புக் காட்ட வேண்டும்.அது முள்ளிவாய்க்காலாகவும் இருக்கலாம்.
பல வருடங்களின் பின்னர் இலங்கை வரைபடத்தில் தேடப் படுகின்ற ‘மான் பாஞ்ச வெளி‘ போல் முள்ளி வாய்க்காலும் விடுபட்டு போயிருக்கலாம்.எதிர் பார்த்தபடி…
இந் நூலை வெளியிட்ட ‘வடலி‘ வெளியீட்டகத்தாருக்கும் எமது நன்றி.
-கவிஞர் முல்லைஅமுதன்-
Sunday, October 31, 2010
தாய்வீடு பத்திரிகையில் நாவல் விமர்சனம்

கனடாவிலிருந்து வெளியாகும் 'தாய்வீடு' மாதாந்த சஞ்சிகை/பத்திரிகையில் பிரபல எழுத்தாளரான "பூரணி" ம்காலிங்கம், நாவல் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியுள்ளார். அவருக்கும் 'தாய்வீடு' நிர்வாகத்தினருக்கும் என் நன்றி.
என்.கே.மகாலிங்கம்

என் பார்வையில் -கே.எஸ்.பாலச்சந்திரனின் கரையைத் தேடும் கட்டுமரங்கள் -நாவல்
மிகச் சுருக்கமாகச் சொல்வதானால் இந்த நாவல் அந்தோனி என்ற மீனவ இளைஞனின் காதல் கதை. அல்லது அந்தோனி காதல்களில் தோல்வி அடைந்த கதை. முதல் காதலில் தோல்வியடைந்து சோகத்துடன் நின்ற அந்தோனியுடன் ஆரம்பித்த நாவல் முடிவிலும் இன்னொரு காதலில் தோல்வியடைந்த அந்தோனியுடனே முடிகிறது. இடையில், தகப்பன் மரியாம்பிள்ளை சம்மாட்டி, தாய் மதலேனாள், தமையன், தங்கைகள் எலிசபேத், மேரி, மனைவி சில்வியா, முதல் காதலி செல்வராணி, இரண்டாவது காதலி ஸ்ரெல்லா என்பவர்களுடன் மான்பாய்ஞ்ச வெளி என்ற கிராமமும் ஒரு சில உறவுக் குடும்பங்களும், புங்குடுதீவிலுள்ள மீனவப் பகுதியிலுள்ள ஒரு குடும்பமும் ஊடாடுகின்றன.
மான்பாய்ஞ்ச வெளி மீனவர்கள் தங்கள் கடலில் மீன்பிடித் தொழில் குறைந்த பருவ காலத்தில் புங்குடுதீவு தெற்குக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். அங்குள்ள மீனவத் தொழிலாளிகள் சிலரை மான்பாய்ஞ்சவெளி மீனவர்கள் தொழிலுக்கு உதவிக்கு வைத்தும் கொள்வர்.
அந்தோனி முதல் காதலில் தோல்வியடைந்து சோகத்துடனும் துயரத்துடனும் இருக்கையில் குடும்பம் புங்குடுதீவுக்குத் தொழிலுக்குச் செல்லுகின்றது. அவனும் செல்கிறான். போன இடத்தில் இவனுக்கு இரண்டாம் காதல் ஸ்ரெல்லா என்பவளுடன் ஆரம்பமாகின்றது. இவள் கணவனை இழந்த இளம் விதவை. அரசினர் ஆஸ்பத்திரியில் தாதி. அவளுடைய தாய் லூர்த்தம்மா. அவளை அந்தோனியின் தகப்பன் மரியாம்பிள்ளை இளம் கணவனாக இருந்த காலத்தில் புங்குடுதீவுக்குத் தொழிலுக்குச் சென்ற இடத்தில் ‘வைத்திருந்தவன்’. அப்பொழுது ஸ்ரெல்லா சிறு குழந்தை. லூர்த்தம்மாவின் கணவன் அப்பொழுது அவர்களைக் கைவிட்டு வேதாரிணியத்தில் குடும்பமாக போய் விட்டான். லூர்த்தம்மாவுக்கும் மரியாம்பிள்ளைக்கும் இருந்த உறவு பலருக்குத் தெரியாது.
மரியாம்பிள்ளை, அந்தோனி ஸ்டெல்லா காதலை விரும்பவில்லை. அதனாலும்; அந்தோனி, ஸ்டெல்லாவை இன்னொரு ஆடவனுடன் பார்த்து சந்தேகப்பட்டதாலும் இந்தக் காதலும் நிறைவேறவில்லை. அவனுக்கு மான்பாய்ஞ்சவெளியின் அருகிலுள்ள கிராமத்திலுள்ள பணக்காரச் சம்மாட்டியின் மகள் சில்வியாவுக்கும் திருமணம் நடக்கிறது. சுpல்வியா பணக்காரி. படித்தவள் என்ற திமிர் பிடித்தவள். திருமணம் முடித்த நாளிலிருந்தே அவள் அந்தோனியையும் அவன் குடும்பத்தையும் விரும்பவில்லை. ஏறுமாறாக நடத்துகிறாள். அதனால் திருமண வாழ்க்கையிலும் அவனுக்குக் காதல் சுகம் கிடைக்கவில்லை. அந்தவேளையில் ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. அவன் தொழிலுக்குச் சென்ற படகு புயலில் அகப்பட்டுக் காணாமல் போகிறது. படகில் சென்ற அந்தோனியும் மற்ற மூவரும் காணாமல் போய் விடுகிறார்கள். அத்துடன் அவனுடைய குடும்பத்தில் தாய் சாகிறாள். எலிசபெத்தின் திருமணம் தடைப்படுகிறது. தகப்பன்; தடுமாறுகிறான். தொழில் பாதிப்படைகிறது. படகுகள் விற்கப்படுகின்றன. சில்வியாவும் ஒரு மைனருடன் ஓடிப் போய் விடுகிறாள். தெய்வாதீனமாக அந்தோனியும் மற்றவர்களும் சென்ற படகு தாய்லந்து தேசத்தில் கரையொதுங்குகிறது. அதிலிருந்த இருவர் இறந்து விட அந்தோனியும் மற்ற இருவரும் இலங்கை திரும்புகின்றனர். அந்த இடைவெளிக்குள் தாயில்லை. மனைவி வேறொருவனுடன் ஓடி விட்டாள். ஆகவே, அவனுடைய அண்ணியின் தூண்டுதலில் திரும்பவும் புங்குடுதீவுக்கு ஸ்டெல்லாவிடம் காதலைத் தேடி ஓடுகிறான். அங்கும் அவளுக்கு கணவனின் தம்பியை திருமணம் செய்யப்பட்டு விட்டதை ஸ்டெல்லா தெரிவிக்கிறாள். திரும்பவும் அந்தோனி காதல் தோல்வியில் சோகத்துடன் நிற்கிறான். அத்துடன் நாவல் முடிகின்றது.
இந்த நாவலில் சில சிறப்புக்கள் உள்ளன. முதலாவது, நாவலை வாசகன் தங்குதடையின்றி ஒரே இருப்பில் வாசிக்கக் கூடியதாக நேர்கோட்டில் கதை செல்கிறது. ஆசிரியர் நல்ல கதைசொல்லி. இரண்டாவது, யாழ்ப்பாணத்து மொழிநடை. அதனால் நாவல் எந்தவகையிலும் எமக்குச் சிரமம் தரவில்லை. மண்வாசைனயை ஒட்டிய உரையாடல்களும் சொற்களும், சொல்லாடல்களும், பின்னணியும், காட்சிகளும் கதையை ஓட்டிச் செல்வதனால் கதைக்கு ஒரு உண்மைத்தன்மை உள்ளது. அதனால் இப்படியும் நடக்குமா என்ற ஆதங்கமோ வியப்போ படத் தேவை வரவில்லை. புயலில் அகப்பட்ட படகொன்றில் சென்ற மீனவர்கள் தாய்லாந்தில் அடைந்து திரும்பிய கதை ஒன்றும் யாழ்ப்பாணத்தவருக்குத் தெரிந்ததே. எனவே, அதுவும் சாகசக் கதையின் அம்சமல்ல. மூன்றாவதாக, சோக உணர்ச்சிகள், இரக்கம், குடும்ப உறவு, அன்பு, பாசம், பொறுப்புணர்வு ஆகிய அறங்கள் எல்லாம் மீறப்படாமலே அப்படியே படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. அவை வாசகர்களை உருக வைத்து நாவலை விடாமல் வாசிக்கத் தூண்டுகின்றன. நாலாவது, மீனவர்களின் வாழ்வியல், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், தொழில் நடவடிக்கைககள், தொழில் நுட்பங்கள், போன்றவை அனைத்துமே நுட்பமாக அவதானிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. ஐந்தாவது, யாழ்ப்பாணக் கிராமங்களினதும், குறிப்பாகப் புங்குடுதீவுக் கிராமத்தினதும் புவியியல் அமைப்பும் இடங்களும் நுட்பமாக அவதானிக்கப்பட்டுள்ளன. வாடைக்காற்று, கச்சான் காற்று, சோளகக் காற்று முதலியவைகள் அவற்றின் திசைகள், போக்குகள், காலங்கள், படும் மீன்கள், வலைகள், படகுகள் எல்லாம் முறையாகக் கவனிக்கப்பட்டு பொருத்தமாக எழுதப்பட்டுள்ளன. இவ்வகைகளில் வாசக ருசிகள் கவனிக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த நாவல் வெற்றியே.
அவற்றை விட, தமிழிலக்கியத்தில் இந்த நாவலின் இடம் எது அல்லது ஈழத்திலக்கிய வரலாற்றில் இந்த நாவலின் இடம் எது என்று கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிக் கணிப்பீடு செய்ய நவீன நாவலுக்குரிய சில அம்சங்களை இங்கே கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன்.
எந்த இலக்கியப் படைப்புமே இலக்கிய வரலாற்றில் எக்கால கட்டத்தைச் சேர்ந்தது என்று நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த நாவலின் காலமும் களமும் யாழ்ப்பாணத்தில் 1980 களுக்கு முன்னர் நடந்தவை என்று அனுமானிக்கலாம். ஏனென்றால், அதன் பிறகு ஒரு யுகப்புரட்சியே நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த நாவல் யாழ்ப்பாணக் கிராமங்கள் இயல்வு நிலையில் இருந்த காலத்தில் நடைபெற்றுள்ளன. இப்பொழுதோ 1980 களுக்குப் பிறகோ இருந்த அரசியல் சூழலோ, சமூகச் சூழலோ அங்கிருக்கவில்லை. 30 வருட யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த காலமும் களமுமே இந்தக் கதைக்கானவை. அதுதான் வன்முறை அரசியல், இயக்கக் கெடுபிடிகள்;, யுத்தங்கள், இடப்பெயர்வுகள் முதலியன நடைபெறாத காலம்.
எந்த நாவலும் ஒரு அரசியல் சூனியப் பிரதேசத்தில் நடைபெறாது. அது சாடைமாடையாகக் கூட இந்த நாவலில் கோடிகாட்டப்படவில்லை. ஆனால் இந்த நாவல் பிரசுரமாகியதை வைத்து -இது 2009 இல் தான் வெளிவந்தது- இந்த நாவலின் இலக்கிய வரலாற்றுக் காலப் புள்ளியை குறிப்பிட முடியாது. ஆகவே, இந்த நாவலை நாம் ஒரு முப்பது வருடங்கள் முன் தள்ளி வைத்தால் அக்காலத்தில் இலங்கையில் வெளிவந்த நாவல்களுடன் இதை ஒப்பீடு செய்யலாம். அதுவே இந்நாவலின் இருப்பையும் தரத்தையும் நியாயப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய அளவீடுகள். இன்றைய நவீன, அல்லது பின் நவீன நாவல்களுடன் ஒப்பிடுவது முறையல்ல. இந்நாவல் எழுதப்பட்ட அக்காலத்தில் தான் முற்போக்கு நாவல்களும், செங்கையாழியானின் வாடைக்காற்று, பாலமனோகரனின் நிலக்கிளி போன்ற நாவல்களும் வெளி வந்திருந்தன.
அத்துடன் 70-80 காலத்தில் மீனவர் வாழ்க்கையை வைத்து சில நாடகங்களும் சினிமாவும் வெளிவந்துள்ளன. மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம். அதே காலத்தில் ஐரி~; நாடகாசிரியரான ஜே.எம். சிஞ்( John Millington Sunge) எழுதிய கடலோடிகள் (Riders to tha Sea)என்ற கடல் சார்ந்த நாடகம் ஒன்றை ஆங்கில விரிவுரையாளர் கந்தையா மேடையேற்றினார். தகழியின் செம்மீன் நாவல் சினிமாவாக்கப்பட்டு மக்கள் மனதைக் கவர்ந்திருந்தது. அந்நாவலை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்தும் இருந்தார். அதைப் பரவலாகப் பலரும் வாசித்தும் இருந்தனர்.
செம்மீன் சினிமாவில் (நாவலிலும்) கறுத்தம்மா கணவன் பழனி கடலுக்குப் போயிருந்தபோது பழைய காதலன் பரிக்குட்டி சோகமாகப் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டு, காதலைத் துறக்க முடியாமல் அவனுடன் மீண்டும் தொடர்பு வைப்பாள். அதேபோல இந்த நாவலிலும் அந்தோனி கடலுக்குப் போயிருந்தபோது சில்வியா தன் காதலனுடன் போய் வருவாள். செம்மீனிலும் கடலன்னை அதைப் பொறுக்காமல் கணவனை தனக்குள் இழுத்துக் கொள்வாள். இங்கும் அந்தோனி சென்ற படகு புயலில் மாட்டிக் கொண்டு அவனும் காணாமல் போய் விடுவான். அந்த ஐதீகம் தெரிந்தோ தெரியாமலே இந்த நாவலாசிரியரையும் பாதித்திருக்கிறது.
இந்த நாவல் நேரடியான கதை சொல்லல் முறையில், யதார்த்தப் பண்பில் சொல்லப்பட்டுள்ளது. சிலவேளை யதார்த்த வாதப் பண்புக்கும் இயற்பண்பு வாதத்திற்கும் இடையே இந்நாவல் ஊடாடுகிறது. அதாவது, யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிப்பது, மற்றது இயற்கையை அப்படியே படம்பிடிப்பது. நவீன நாவல்கள் வளர்ச்சியடைந்து பல நவீன உத்தி முறைகளைக் கையாண்டு, நவீன, பின் நவீனப் புனைவுகளாக வளர்ந்தும் விட்டன. பல அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை வாசகர்களே அவிழ்க்க விட்டு ஆசிரியர் மறைந்தும் நிற்கிறார். வாசக வெளிக்கும் மௌனத்துக்கும் கற்பனைக்கும் இடம் விட்டு விடுகிறார்;. இந்த நாவலின் ஆசிரியர் வாசகனுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்காமலே அவரே அனைத்தையும் சொல்லி விடுகிறார். உதாரணமாக, சில்வியா ஏன் மைனரை நாடிப் போனாள் என்பதற்கு அந்தோனி தன் பழைய காதலியை நினைத்துக் கொண்டிருப்பதால் தன்னைத் தொடுவதே இல்லை, அதனால் தான் வேறோருவனிடன் போக வேண்டி வந்தது என்கிறாள். இதை வாசகனே உய்த்துணர வைத்திருக்க வேண்டியது நாவலாசிரியனின் வேலை. விளக்கம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் மூலமாகக் கூட.
நாவலாசிரியர் ஒரு மேடை நாடக நடிகர். வானொலி நாடக நடிகர். அருமையான குணசித்திர நடிகர். அவை 50-60 தமிழ் சினிமாவில் அதிகம் காணக் கூடிய பண்பு. ஒரு மெலோடிராமாவுக்குரிய –மிகையுணர்ச்சிக்குரிய-பல அம்சங்கள் இதிலுள்ளன. குறிப்பாக, அந்தோனியின் பாத்திரம். இந்த நாவல் தமிழ் சினிமாக் கதையின் அம்சங்கள் பலவற்றைக் கொண்டதாக உள்ளது. முக்கியமாக, சில்வியா என்ற பாத்திரம் சினிமாவில் வரும் அச்சொட்டான வில்லியாகவே உள்ளாள். மற்றப் பாத்திரங்கள் பலவும் அப்படியே உள்ளன. அந்தோனி, அவனுடைய தமையன், தங்கை எலிசபெத். கறுப்பு வெள்ளைப் பாத்திரங்கள் அடங்கிய தமிழ் சினிமா உலகம்.
நாவலில் இரண்டு பகுதி மீனவர்களும் கத்தோலிக்க சமயத்தவர்கள். அது ஓர் ஒற்றுமை. அதனால் அவர்களிடையே வேறு வேற்றுமைகள் இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணமாக, மான்பாய்ஞ்சவெளி மீனவர்கள் கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். புங்குடுதீவு மீனவர்கள் வேர்க்குத்திப் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த இரு சமூகங்களிடையேயும் பெண்கள் ‘கொள்வனவு கொடுப்பனவு’ இருக்குமோ என்று எனக்குத் தெரியாது. அதுவும் திருமண பந்தம் செய்யும் அளவுக்கு. வேர்க்குத்திப் பறையர் மீன் தொழில் செய்வதை மறந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. அவர்கள் போர்த்துக்கீசர் காலத்திலேயே கத்தோலிக்கராகி விட்ட ஊர் மக்கள். நாவலாசிரியர் கூறுவதுபோல அவர்கள் அங்கு தங்கி விட்ட மீனவர்கள் அல்ல. டச்சுக்காரர் காலத்தில் அவர்களில் பெரும்பான்மையினர் புடவைக்குச் சாயம் போட்டனர். அதனால் அவர்கள் வேர்க்குத்திப் -வேல்குத்திப்-பறையர் என்று அழைக்கப்பட்டனர். பின்னாளில் அத்தொழில் மறையவே அவர்கள் பல தொழில்களையும் செய்தனர். வலை போட்டு மீனும் பிடித்தனர். கட்டிட வேலை செய்தனர். ஓலை வெட்டினர். தோட்டத்தில் உதவியாளராக இருந்தனர். திருகோணமலை துறைமுகத்தில் வேலை பார்த்தனர். இளம் பரம்பரையினர் படித்து அரச உத்தியோகம் பார்த்தனர். ஆனால் தோணி வைத்து மீன் பிடித்த இன்னொரு சமூகம் புங்குடுதீவில் இருந்தது. அவர்கள் திமிலர். அவர்கள் சைவ சமயத்தவர்கள். இவற்றைக் குறிப்பிட வேண்டி வந்ததற்குக் காரணம், சமூகக் கட்டமைப்பில் இன்னும் யாழ்ப்பாணம் சாதி அடுக்குச் சமூகமே. ஊர் விட்டு ஊர் போனாலும் -அதாவது மான்பாய்ஞ்சவெளியிலிருந்து புங்குடுதீவுக்குப் போனாலும் சரி, நெல்லியடிக்குப் போனாலும் சரி, தேசம் விட்டு தேசம் சென்றாலும் சரி, சாதியம் தீய ஆவியைப் போலத் தொடர்ந்து கொண்டு தான் போயிருக்கிறது, போய்க் கொண்டிருக்கிறது.
தூய சவேரியார் வந்து மதம் மாற்றினால் போல அது மறைந்து விடவில்லை. அதுவும் 80 களுக்கு முதல்.
இறுதியாக, ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ என்பது அருமையான உருவகம்.
Saturday, October 30, 2010
தேரோட்டி மகனும் நானும்

எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேடைநாடகத்தைப் பற்றியது இந்தக்கட்டுரை. கூடவே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களும் இந்த நாடகத்தில் நடித்திருப்பதால் இந்த கட்டுரையை எழுதுவது சந்தோசமான அனுபவமாகவிருக்கிறது.
இந்த நாடகம் எங்கே ஆரம்பித்தது? பாரதக்கதையின் ஒரு கிளைக்கதைதான் இது என்றாலும் வியாசரின் மகாபாரதத்தில் தொட்டதைவிட வில்லிபுத்தூராழ்வார் தமிழில் இயற்றிய 'வில்லிபாரதம்' என்ற நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
பி.எஸ்.ராமையா
இந்தநாடகத்தை எழுதியவர், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடகநடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் (பின்னாளில் குணசித்திரபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர்) நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய பல நாடகங்களில் ஒன்றுதான் தேரோட்டி மகன்.
சேவாஸ்டேஜ் நாடகக்குழுவினரால் மிகவும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட தேரோட்டிமகன் நாடகத்தில் சகாதேவனாக சிறிய பாத்திரத்தில் நடித்த கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் இவ்வாறு தன் அனுபவத்தை கூறுகிறார்.
'1959-ல் பி.எஸ். ராமையா எழுதிய ''தேரோட்டி மகன் '' சேவாஸடேஜ் தயாரிப்பில் உள்ளூர் -வெளியூரெங்கும் பிரபலமாகி..கொடி கட்டிப் பறந்தது.. எஸ். வி. சகஸ்ரநாமம் கர்ணனாகவும் முத்துராமன் துரியோதனனாகவும் பாத்திரமேற்று சிறபபாக நடித்தார்கள்..நான் மூன்று .சீன்களில் ''தலை ' காட்டும் சகாதேவனாக நடித்தேன்..அதிர்ஷ;டவசமாக ஒரு அருமையான மருதகாசியின் பக்திப் பாடலை முதல் .சீனில் பாடி வாயசைத்து கிருஷ;ணனை கட்டிப் போடுவது என் பங்கு சாதனையாக வாய்த்தது. .கிருஷ;ணனை எஸ்.வி.கோபாலகிருஷ;ணனை கட்டிப் போட்டு திரை விழுந்து விளக்கணைந்ததும் கொட்டகையில் தவறாமல் கிளம்பும் பயங்கர கரகோஷ ஒலி.. என் நடிப்புத் திறமையில் அதிக நம்பிக்கையற்ற எனக்கு இன்னும் விளங்காத புதிராகவே இருக்கிறது... புராண நாடகங்கள் இந்த வகையில் நடிகனுக்கு ஒரு வசதியான வாய்ப்பு என்று தோன்றியது...சனங்கள் ஒரு ராமனையோ, கிருஷ;ணனையோ உடனே நம்பி விடுகிறார்கள்'
தேரோட்டிமகன் நாடகத்தை கலையரசு சொர்ணலிங்கம் இலங்கையில் மேடையேற்றியபொழுது, அவர் இந்த நாடகத்தில் வௌ;வேறுபாத்திரங்களில் மாறிமாறி நடித்ததாக அறிகிறோம். அவருடன் அவரது நாடகக்குழுவைச்சார்ந்த ஏ.ரகுநாதன், குழந்தை சண்முகலிங்கம், எஸ்.ரி. அரசு ரி.ராஜகோபால் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.
பின்னர் ஏ.ரகுநாதன் அவர்களே தேரோட்டிமகன் நாடகத்தை பலதடவைகள் மேடையேற்றினார். இவர் காலத்துக்கு காலம் இந்நாடகத்தில் பல சிறந்த கலைஞர்களை இணைத்துக்கொண்டார். இலங்கைவானொலியின் பிரபல அறிவிப்பாளர் திருமதி இராசேஸ்வரி சண்முகம் சிலமேடையேற்றங்களில் குந்தியாக நடித்து தன்சோகநடிப்பினால் பார்வையாளர்களை கண்ணீர் சிந்தவைத்த நினைவுகளை ரகுநாதன் அவர்கள் என்னோடு பங்கிட்டுக்கொண்டிருக்கிறார். இன்னுமொரு மறக்கமுடியாத கலைஞர் ரி.ராஜேஸ்வரன். இந்hடகத்தில் கர்ணனுடைய மாமன்பாத்திரத்தில் நடிப்பதைப்பார்த்திருக்கிறேன். இவர் இலங்கையின் ஆரம்பகால திரைப்படங்களில ஒன்றான 'டாக்சி டிரைவர்' திரைப்படத்தின் கதாநாயகள்.
1974ம் ஆண்டில் மார்கழிமாதத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரி;, கிளிநொச்சி அரசினர் வித்தியாலயம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் ஆகிய அரங்குகளில் மூன்றுநாட்கள் அடுத்தடுத்து தேரோட்டிமகன் அரங்கேறியபோது நானும் இணைந்துகொண்டேன். அனேகமாக நகைச்சுவைப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த என்னை முதன்முதலாக ஒரு இதிகாசநாடகத்தில் அதுவும் கண்ணன் பாத்திரத்தில் நடிக்கவைத்தார் ரகுநாதன் அண்ணன்.
எனக்கு இது புது அனுபவமாக இருக்கப்போகிறது என்று தெரிந்தாலும், ஒப்பனை, ஆடை அலங்காரம், பேச்சு நடை, நடிப்புப்பாணி என்று பலவிதத்திலும் மாறுபட்ட இந்த நாடகத்தில் அதுவும் கிருஷ;ணன் பாத்திரத்தில்; நான் சோபிப்பேனா என்ற சந்தேகம் எனக்கு இருக்கவே செய்தது. (ஆமாம்.. மயிலிறகும், வேய்ங்குழலுமாக நீலவண்ணனாக வரும் கண்ணன்தான்.)
இருந்தாலும் என்னால் முடியும் என்று நம்பிக்கையை தந்த ரகுநாதன் அதற்கான ஒரு சுவையான காரணத்தையும் சொன்னார். பொதுவாக இத்;தகைய கண்ணன், ராமன் போன்ற தெய்வப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சற்றுப் பெண்மைச்சாயல் உள்ளவர்களாக இருக்கவும் வேண்டும். ஏற்கெனவே நான் ஒரு நகைச்சுவை நாடகத்தில் (புளுகர் பொன்னையா) ஒரு காட்சியில் பெண்வேடத்தில் வந்து அசத்தியிருக்கிறேன் என்பதையும் ஞாபகப்படுத்தினார். அத்தோடு மீசை வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் முத்தாய்ப்பாக சொல்லிவிட்டார்.
என்ன செய்வது.. கருகருவென்று வளர்ந்திருந்த எனது இளமைக்கால மீசையை தியாகம் பண்ணத்துணிந்து விட்டேன். ஆனாலும் அவரோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன். அதாவது ஒப்பனை செய்துகொள்வதற்கு சற்றுமுன்னதாகத்தான் மீசைக்கு விடைகொடுப்பேன் என்பதுதான் அது. இது ஒவ்வொரு முறை மேடையேற்றத்தின்போதும் நடந்தது. மீசை வளர்வதும், மறைவதுமாய் தொடர்ந்தது.
ஆந்த நாடகத்தில் என்னோடு நடித்தவர்களில் அனேகர் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வாழ்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள். அத்தோடு அக்கால இசைநாடகங்களில் அனேகமாக பெண்வேடங்களில் ஆண்களே நடிப்பார்கள். அதேபோல எங்கள் நாடகத்திலும்; முக்கிய பெண் பாத்திரமான 'குந்தி' வேடத்தில் நடித்தவர் ஒரு ஆண்கலைஞர். (பிரான்சிஸ் ஜெனம்.(வாடைக்காற்று திரைப்படத்தில் நடித்தவர்) இதைவிட எங்களுக்கு ஒப்பனை செய்தவர் மிகநீண்டகாலமாக ஒப்பனைசெய்வதில் பிரக்யாதி பெற்றிருந்த சாமுவேல் பெஞ்சமின் என்பவர். அவர் ஒப்பனை செய்வதற்கு 'அரிதாரம்' என்ற சுண்ணாம்பு கலந்த பொருளையே (முத்துவெள்ளை என்பார்கள்) பாவித்தார். அதை பூசியபின் நேரம் செல்லச்செல்ல பூச்சு காய்ந்து கொண்டேபோகும், நாடி. நரம்புகளெல்லாம் பற்றி இழுப்பதுபோல, எனக்கு இருந்தது. தலைநகர் நாடகங்களில் எங்கள் ஒப்பனை என்பது மெல்லிய பூச்சுதானே.
பட்டுச்சேலையால் தார்ப்பாய்ச்சி உடுத்தி, கண்இமைக்கு கீழான சிறுபகுதி, உதடுகள், உள்ளங்கை, உள்ளங்கால் (இவற்றுக்கு சிவப்பு வர்ணமும்) இவை தவிர்ந்த, உடம்பின் மேற்பகுதி, கெண்டைக்கால் என்று முழுவதும் பச்சை வர்ணத்தால் பூசிவிட்டார்கள். நீலவண்ணன் அல்லவா.. எதற்கு பச்சை நிறம் என்று கேட்டதற்கு, நீலம் பூசினாhல் மின்சாரஒளியில் நிறபேதம் அடைந்து கறுப்பாகத்தெரியுமாம். ஆனால் பச்சை வர்ணம், அப்படி பேதமடையும்போது நீலவண்ணம் காட்டுமாம் என்றார்கள். அது உண்மையாகத்தான் இருந்தது. ஒப்பனை முடிந்தபின் ஏறக்குறைய பஞ்சவர்ணக்கிளி போல இருந்தேன்.
இத்தனையும் போதாதென்று கைகளில் அலங்காரப்பட்டிகள், கழுத்தில் மணிமாலைகளுடன், முழங்கால் வரை தொங்கும் பெரிய மலர்மாலை (நிஜமானதுதான்), கையில் நீண்ட புல்லாங்குழல் (சிறிதாக இருந்தால் ஏதோ குச்சி என்று நினைத்துவிடுவார்களே), கடைசி கடைசியாக மயிலிறகுகள் பொருந்திய கிரீடம் (மட்டையோ, தகரமோ) ஒன்றையும் தலையில் வைத்து விட்டார்கள். ஏதோ என் தலைக்கு அளவாக 'மெத்தென்று' சுகமாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது மகா. மகா, தவறு. ஆந்த முடி கழன்று விடாமல் இருப்பதற்காக அதில் பொருந்திய கம்பிகளை முறுக்கி இறுகக் கட்டிவிட்டார்கள். சிறிதுநேரத்தில் நெற்றி நரம்புகளெல்லாம் புடைத்து பெரிய தலைவலியே ஆரம்பித்து விட்டது. இத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக்கொண்டு விடியவிடிய நடைபெற்ற கூத்துகள், இசைநாடகங்கள் என்பனவற்றில் நடித்த எனக்கு முந்திய காலத்து நடிகர்களை ஒருமுறை நினைத்துக்கொண்டேன்.
ஓப்பனையெல்லாம் முடிந்து சககலைஞர்கள் முன்னால் போய் நின்றபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் எனது வேதனையை விரட்டியடித்தன. தென்னிந்திய சினிமாவில் நிரந்தர ராமராக, கிருஷ;ணனாக தோன்றிப் புகழ்பெற்ற என். ரி. ராமராவ், நரசிம்மபாரதி (1948ல் 'அபிமன்யு' படத்தில் கிருஷ்ணராக நடித்தவர். எம்.ஜீ.ஆர் தான் இதில் அருச்சுனன்) ஆகிய இரு நடிகர்களுக்குப் பிறகு, கிருஷணன் வேடம் எனக்கு பொருந்தி வந்திருக்கிறதென்று மனப்பூர்வமாகச் சொன்னார்கள். (ரகுநாதன் பத்திரிகைக் குறிப்பொன்றில் பின்னர் இதைக்குறிப்பிட்டிருந்தார்.)
யாழ்ப்பாணம், மானிப்பாய், கிளிநொச்சி போன்ற இடங்களில் மேடையேறியபோது 'கிருஷ்ணனின் நிரந்தரப்புன்னகையை, உரையாடலை, கள்ளத்தனமான பார்வையை ரசிகர்கள் வரவேற்கவே செய்தார்கள். எனக்கு மிகுந்த சந்தோசம்.
தொடர்ந்து 1976ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றம். யாழ்ப்பாணத்திலிருந்து இந்த நாடகம் வந்திருக்கிறதென்பதினால் நல்ல கூட்டம். எனக்கு அறிமுகமான பல (கொழும்பு வாழ்) கலைஞர்கள் வந்திருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு நான் இந்த நாடகத்தில்; நடிக்கிறேன் என்று தெரியாது. போதும் போதாதற்கு மீசை இல்லாத முகம், பச்சை வர்ணப்பூச்சு. என்னை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
நாடகம் ஆரம்பித்தது. தொடக்கத்தில் இருந்தே நாடகம் பார்வையாளர்களுக்கு பிடித்துப்போயிருக்கவேண்டும். ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சுவையான கட்டம். கவிஞர் வைத்தீஸ்வரன் சொன்ன அதே கட்டந்தான். மகாபாரதப்போரை நடத்துவதா, இல்லையா என்பதுபற்றி கண்ணன் பாண்டவர்களின் அபிப்பிராயத்தை ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டுவருகிறார். மதியூகியான சகாதேவனிடம் கேட்டபொழுது, அவன் இப்படிச்சொல்கிறான்.
பாரதப்போர்வராமல் தடுப்பதற்கு உன்னைக் கட்டிப்போட்டால் சரியாகும் என்பதாக கிருஷ;ணனைப் (என்னைப்) பார்த்துச்சொல்கிறான்.
'கண்ணா.. உன்னை கட்டிப்போடுவேன்'
'சகாதேவா.. ஆகட்டும்.. அப்படிச்செய்.. பார்க்கலாம்'
'கண்ணா.. உன்னைவிட இலகுவாக வசப்படக்;கூடிய பொருள் சக்தி வேறு ஒன்றுமில்லை'
என்று சொல்லி சகாதேவன் முழங்காலில் நின்றவாறே ஒரு பாடலைப் பாடுகிறான்.
''நீ பாரத அமரில் யாவரையும் நீறு ஆக்கிப்
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி
மா பாரதம் அகற்ற மற்ற் ஆர் கொல் வல்லாரே''
– வில்லிபாரதப்பாடல் இது.
(இந்தப்பாடலை மேடையில் பாடியவர் அண்மையில் மறைந்த சிறந்ததொரு பாடகரான திலகநாயகம் போல். சகாதேவனாக நடித்தவர் ஹரிதாஸ். 'நான் உங்கள் தோழன்' திரைப்படத்தில் நடித்தவர்.)
கிருஷ்ணன் அப்படியே கட்டுண்டு நின்று மந்தஹாசம் செய்கிறார். (மந்தஹாசம் என்ற புன்னகை எப்படி செய்யவேண்டுமென்று இயக்குனர் ரகுநாதன் எனக்கு தனிவகுப்பே நடத்தினார்), அந்தக்காட்சியின் தன்மை, ஒலிக்கும் இனிய பாடல் - நான் மெய்மறந்ததுமாதிரி புன்னகை தவள நிற்கிறேன். அரங்கில் உள்ளவரும் கிறங்கிப்போய் இருக்கிறார்கள்.
முன்வரிசையில் என் பார்வை ஓடுகிறது. கவிஞர் சில்லையூர் செல்வராசன் அருகில் அவரது இளம்மனைவி கமலினி செல்வராஜன். (கமலினி அக்காலத்தில் பிரபல வானொலித்தொடர் நாடகமான 'தணியாத தாக'த்தில் எனது தங்கை கமலியாக நடித்துக்கொண்டிருந்தவர்) என் மனதில் குறும்பான ஒரு எண்ணம் வந்தது.
அதே மந்தஹாசப்புன்னகையுடன் சபையை அரைவட்டத்தில் பார்வையிட்டு வரும்போது, கமலினியைத் தாண்டும்போது கண்களை சிமிட்டினேன். கமலினி திடுக்கிட்டுப்போய் தன் கணவரிடம் (சில்லையூராரிடம்) ஏதோ குனிந்து சொல்வது தெரிந்தது. யாரோ தெரியாதவன் இப்படிச்செய்கிறான் என்று அவர்களுக்கு கோபம் வந்திருக்கவேண்டும். மீண்டும் அதேமாதிரி அரைவட்டத்தில் முகம் திரும்பும்போது – அதே கண்சிமிட்டல். அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.
நாடகம் தொடர்கிறது.
கண்ணன் ஒன்று போல பல வடிவங்களைக் காட்டினான். ஆனாலும் பெரும் ஞானியாகிய சகாதேவன், தன் பக்தித் திறத்தால் மூலவரை அடையாளம் கண்டு, அவரைத் தன் மனதினால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
சகாதேவன் மனதின் இறுக்கம் பொறுக்க இயலாமல் கண்ணன், 'கட்டுணடேன் சகாதேவா. உன் அன்புத்தளையில் கட்டுண்டேன். என்னை விட்டுவிடு' என்று கெஞ்சுகிறார்.
':நீங்கள் இப்படிச்செய்தால் விட்டுவிடுகிறேன்.' என்று நிபந்தனை விதிக்கிறான் சகாதேவன்.
'வன்பாரதப்போரில் வந்தடைந்தேம் ஐவரையும் நின்பார்வையால் காக்கவேண்டும் நெடுமாலே'
கண்ணன் சொல்கிறார். ஓம்..
(என்று என்று இறைஞ்சி இரு தாமரைத் தாளில்
ஒன்றும் கதிர் முடியாற்கு "ஓம்' என்று உரைத்தருளி..)
(இந்த இடத்தில் புலவர் கீரனின் 'வில்லிபாரத சொற்பொழிவு என் ஞாபகத்திற்கு வருகிறது. சகாதேவன் வேண்டுகோளுக்கு கண்ணன் சொன்ன பதில் ::ஓம்' என்றுதான் வில்லிபாரதத்தில் வருகிறது. கூடவே இலங்கைத்தமிழர்களாகிய நாங்கள் 'ஓம்' என்ற அந்தச்சொல்லையே பாவிக்கிறோம் என்று கூட்டிக்காட்டுகிறார்.)
நாடகம் முடிந்ததும், முடியாததுமாக சில்லையூரார் யாரிடமோ கேட்டு கண்ணனாக நடித்தது நான்தான் என்று அறிந்திருக்கிறார். இந்தச்சிக்கல் இப்படி சுமுகமாக முடிந்தாலும் வேறோரு சிக்கல் எனக்காக ஒரு ரசிகர் வடிவில் காத்திருந்தது.
அவர் ஒரு கிருஷ;ணபக்தராக இருக்கவேண்டும்.. 'பளிச்'சென்ற வெள்ளை உடுப்பு அணிந்திருந்தார். 'கண்ணா..உன்னைக் கட்டி அணைக்கப்போகிறேன்' என்று அடம் பிடித்துக்கொண்டு நின்றார். 'ஐயா. எனக்கு ஆட்சேபணை இல்லை.. ஆனால் .உங்கள் வெள்ளை உடுப்பெல்லாம் பச்சையாகி விடுமே' என்று நான் சொல்லித்தான் பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கிருஷ்ணனை (என்னை) கட்டி அணைத்து விட்டு 'பச்சைமாமலைபோல் மேனி' யாளனாகச் சென்றார். அவரது வீட்டில் ;வரவேற்பு' எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
இந்த நாடகத்தில் என்னுடன், பிரபல நாடகாசிரியர் குழந்தை சண்முகலிங்கம் (அருச்சுனன்), ஏ.பிரான்சிஸ் ஜெனம் (குந்தி), ரி.ராஜேஸ்வரன் (சார்த்தகேசி), சிவபாலன் (துரியோதனன்), ஹரிதாஸ் (சகாதேவன்) போன்றோர் அற்புதமாக நடித்தார்கள்.
என்கலைவாழ்வில், மறக்கமுடியாத திருப்பத்திற்கு காரணமானவரை எப்படி மறக்கமுடியும். 'தேரோட்டி மகனை'த்தான் சொல்கிறேன். தேரோட்டி மகனாக (கர்ணனாக) களகச்சிதமாக நடித்து, எங்களையும் இயக்கியவர்;, பவளவிழா நாயகன் ஏ.ரகுநாதன் அவர்கள்தான்.
"சுட்ட பழ்மும் சுடாத மண்ணும்' - ஏ.ரகுநாதன் பவள்விழா மலருக்காக எழுதியது)
Friday, October 29, 2010
"தூறல்" பெருக்கின்றது....

"தூறல்" பெருத்தால் அது மழைதான்..!
கனடாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "தூறல் .. " அட்டகாசமாக வண்ணத்தில் தோய்த்தெடுத்தது போல வெளிவந்து, இலவசமாக எல்லோரினதும் கைகளில் தவழ்ந்தபோது, மனதிற்குள் ஒரு சந்தேகம் எழ்த்தான் செய்தது.
இவ்வளவு அழ்கான அச்சமைப்பில், வழுவழுப்பு காகிதத்தில், கவர்ச்சியான படங்க்ளுடன், ஒருபக்கம், இரண்டு பக்கங்களுக்கு மேலாகப் போகாத படைப்புகளுடன் எத்தனை நாட்களுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம்தான்.
அந்த சந்தேகங்கள் யாவையும் தகர்த்தெறிந்து கொண்டு, இதோ முதல்வருட முடிவில் நான்காவது இதழும் எங்கள் கைகளுக்கு கிடைத்து விட்டது.
இன்னமொரு திருப்பம். அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், குரு அரவிந்தன், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசபாபதி என்று அறியப்பட்டவர்கள் யாவரும் எழுதுகிறார்கள்.
முதலாவது இதழில் இருந்து "என் மனவானில்" என்ற எனது நினைவுத்தொடர் கட்டுரை வருவது தனிச்சந்தோசம்.
"தூறல்" சஞ்சிகைக்கு பொறுப்பானவர்களின் கைகளைப் பற்றி உற்சாகமாக குலுக்க விருப்பமாகவிருக்கிறது. விளம்பரதாரர்களின் ஆதரவு தாராளமாக கிடைத்தால் "தூறல்" பெருமழையாகி, எங்களை ஆனந்தம் கொள்ளவைக்கும்..
பிரதம ஆசிரியரான ராஜ்மோஹன் செல்லையாவுக்கு ஒரு பூங்கொத்து. பிடியுங்கள்.
Subscribe to:
Posts (Atom)








