Sunday, July 8, 2012

எழுத்தாளர் ராமகிருஷ்ணன் - இயல்விருது

அண்மையில் எஸ்.ராமகிருஷ்னன் தமிழ்தோட்டம் அமைப்பின் இயல்விருதை பெறுவதற்காக கனடா வந்தபொழுது, அந்த வைபவத்தில் கலந்துகொண்டேன். என்னை நானே அவருக்கு அறிமுகம் செய்துகொள்ளும் சங்கடத்திற்கு உள்ளாகாமல் நண்பர்கள் மூர்த்தியும். ஜெயகரனும் காப்பாற்றினார்கள். எனது இரண்டு நூல்களையும் அவருக்கு கொடுக்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது.


னிருதுபெற்றபின் நீண்ட உரையாக அமைந்த அவரது ஏற்ப்புரை சுவையும், ஆழமும் உடையதாக அமைந்து எங்களை கட்டிப்போட்டது.
ஒவ்வொருவரும் தங்கள் மண்ணை, பிறந்தஊரை எப்படி நேசிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக அவர் சொன்ன பைபிள் கதை மனதில் ஆழ்ப்பதிந்து போனது.

"தான் விட்டுப்போகும் தன் ஊரை. தான் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்ற ஊரை, தான் வாழ்ந்த தனது ஊரை திரும்பிபார்த்தால் தான் உப்புத்தூணாக மாற நேரிடும் என்று தெரிந்தும் லோர்த்தின் மனைவி தான் இனிப் பார்க்கமுடியாத தன் ஊரை ஒருகணம் திரும்பிப்பார்த்து உப்புத்தூணாகிப் போகிறாள் என்று அவர் சொல்லியபோது எங்கள் நினைவு எங்கள் மண்ணைத் தொட்டு திரும்பியது. கூடவே பெண்களுக்கும் உப்புக்கும் உள்ள நெருக்கத்தை சுவைபடச்சொன்னார். ஏராளமான மொழிகளை தெரிந்து உலகமெலாம் சுற்றித்திரிந்த ராகுல் சாங்கிருத்யாயன் இறுதியில் எதுவுமே பேசமுடியாதவராய், நினைவுகளை மீட்டுக்கொள்ளமுடியாதவராக மாண்டுபோன சோகத்தைச்சொன்னார். இப்படி பொருத்தமான உபகதைகளுடன் அவரது நீண்ட உரை அமைந்திருந்தது. அவரது எழுத்தாற்ற அவரது பேச்சில் எதிரொலித்த்து. (அவரது உரை காணொளியில் பார்க்கலாம்)

No comments:

Post a Comment