Monday, May 30, 2011

பாரதி கலைக்கோவில் விழாவும் நூல் வெளியீடும்

எனது நாவலான "கரையைதேடும் கட்டுமரங்களுக்கு' தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இலக்கிய விருதுகளில் ஒன்றானா அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தம்ஐக்காக. பாரதி கலைக்கோவில் ஸ்கார்பரொவில் மே மாதம் 29ந்;திகதி பாராட்டு விழா எடுத்து கெளரவித்தது. அதிபர் பொ.கனகசபாபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பல இலக்கிய பிரமுகர்கஆளும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
<ப்ர்/>


எனது தாயார் திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம்> திருமதி கந்தவனம், திருமதி மாலினி அரவிந்தன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்த்து வைத்தார்கள். .


பாரதி கலைக்கோவில் நிறுவனர் எஸ்.மதிவாசன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.


அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் தலைமை உரை வழங்குகிறார்.


ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரன் ஆய்வுரை நிகழ்த்தும்போது..

திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி


அமுதன் அடிகள் விருதை எனக்கு கனடாவில் மீளளிப்பு செய்கிறார் தலைவர் பொ.கனகசபாபதி. அருகில் எனது துணைவியார்..


அமுதன் இலக்கீயவிருதுடன் நானும் துணைவியாரும்


எனது புதிய நூலான "நேற்றுப் போல இருக்கிறது" சிறப்புப் பிரதியை எனது அன்னையாரிடம் வழங்குகிறார் உதயன் ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்கள்.


வந்திருந்த அன்பர்களில் ஒரு பகுதி


எனது நாவல் பற்றி பலர் எழுதிய விமர்சனங்கள், நேர்காணல்கள், அமுதன் இலக்கியவிருது தொடர்பான கட்டுரைகள், வாழ்த்துச்செய்திகள் அடங்கிய சிறப்பு மலர் ஒன்றும் அன்று வெளியிடபட்டது. இந்த விழா மலரை தொகுத்து வழ்ங்கியவர் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள்.


என் மதிப்புக்குரிய பேராசிரியர் பாலசுந்தரம், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசபாபதி ஆகியோருடன் நான்,


கனடாவில் முதல் முறையாக ஒரு இலங்கைக் கலைஞனின் கதையை வில்லுப்பாட்டில் சொன்ன சோக்கல்லோ சண்முகம் வில்லிசைக் குழுவினருடன்..

No comments:

Post a Comment