Monday, October 29, 2007

அண்ணை றைற் - ஒலித் தட்டு (C.D)

அண்ணை றைற் - ஒலித் தட்டு (C.D) - கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் ஒரே நாளில்



கனடாவில்

கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30க்கு கனடாவில் டொரொன்ரொ மாநகரில் அஜின்கோட் கொம்யுனிற்றி சென்ட்ர் ( Agincourt Community Centre, 31, Glen Watford Drive) மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில்
ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டு வெளியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பரமற்றா நகர மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. சிட்னியின் முதல் தமிழ் வானொலி "தமிழ் முழக்கம்" தனது 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு நாளில் இந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.

உலகத்தின் ஒரு அந்தத்தில் இருக்கும் கனடாவிலும், மறு அந்தத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவிலும் ஒரே நாளில் இந்த நிகழ்வு நடைபெறுவது இன்னும் சிறப்பானதொரு விடயம்.

மேலதிக செய்திகளும், நிகழ்வுப்படங்களும் பின்னர் வரும்.
http://2cinaustralia.blogspot.com/







இலங்கையின் முதலாவது தமிழ் தனி நடிப்பு (First Tamil stand-up comedy)நிகழ்ச்சியான " அண்ணை றைற்" இவ்வாண்டு 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

1973ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதியன்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஆறாம் இலக்க கலையகத்தில் பார்வையாளர்களுக்கு முன்னால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட "கும்மாளம்" நிகழ்ச்சியில் முதன்முதலாக நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலும் பல மேடைகளிலும், 1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டின் போதும் அரங்கேறியது.

ஒலிப்பதிவு நாடவாக உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்கள் வீடுகள் எல்லாம் சென்றடைந்த " அண்ணை றைற்", அதன் தொடர்ச்சியாக உலகின் பல நாடுகளிலும் நேரடியாக மேடையேறியது.

1989ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும், சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரிலும் நேரில் தோன்றி " அண்ணை றைற்" நகைச்சுவை விருந்தளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தொடர்ந்து எத்தனை நகரங்களில் -
ரொரன்ரொ, சான்பிரான்சிஸ்கோ, பொஸ்ரன், வன்கூவர், சியாற்றில், நியூயோர்க், மியாமி, லொஸ் ஏஞ்சல்ஸ், ஹியூஸ்ரன், நியூ ஜேர்சி, வின்னிபெக், சஸ்கட்டூன், கல்காரி, எட்மண்ரன்....

34 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய ஒலித்தட்டாக (Compact Disc) வெளி வருகிறது.

7/29/2007

'அண்ணை றைற்' இறுவட்டு(CD) வெளியீடு - படங்கள்

"கனடாவில்"

கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00க்கு கனடாவில் டொரொன்ரொ மாநகரில் அஜின்கோட் கொம்யுனிற்றி சென்ட்ர் ( Agincourt Community Centre, 31, Glen Watford Drive) மண்டபத்தில் வெளியிடப்பட்டட்து.



நிகழ்ச்சித் தொகுப்பு - துஷி ஞானப்பிரகாசம்


தமிழ் வாழ்த்து/கனேடிய தேசிய கீதம் - பாரதி க்லைக்கோயில் மாணவிகள்













மேடையில் - எஸ். எஸ். அச்சுதம்பிள்ளை, கே. எஸ். பாலச்சந்திரன், பொன்.கனகசபாபதி, கவிஞர் கந்தவனம், உதயன் ஆர்.என். லோகேந்திரலிங்கம்



பார்வையாளர்கள்



வரவேற்புரை - எஸ். மதிவாசன்


தலைமையுரை பொன். கனகசபாபதி


ஆசியுரை - ஆர். என். லோகேந்திரலிங்கம்


வெளியீட்டுரை - கவிஞர் கந்தவனம்


எம். ரஜீவிகரன் கெளரவிக்கப்படுகிறார்


ஓவியர் கருணா கெளரவிக்கப்படுகிறார்


பி. விக்னேஸ்வரன் கெளரவிக்கப்படுகிறார்.


எஸ்.வி. வர்மன் கெளரவிக்கப்படுகிறார்


எஸ். ராஜ் கெளரவிக்கப்படுகிறார்


கவிஞர் பொன்னாடை போர்த்துகிறார்
















வாழ்த்துரை - பி. விக்னேஸ்வரன்






வாழ்த்துரை - எஸ்.எஸ். அச்சுதம்பிள்ளை


சிறப்புப் பிரதி - மனுவல் ஜேசுதாசன்


சிறப்புப் பிரதி - குணா செல்லையா


சிறப்புப் பிரதி - ஸ்ரீதவராஜா


சிறப்புப் பிரதி - இளையபாரதி


சிறப்புப் பிரதி - கீதவாணி ராஜ்குமார்


பிரம்மஸ்ரீ விஜயகுமாரக்குருக்கள் சந்தனமாலை அணிவிக்கிறார்


பிரம்மஸ்ரீ விஜயகுமாரக்குருக்கள், பிரம்மஸ்ரீ பஞ்சாட்சரக்குருக்கள் உடன்


வாழ்த்து - மனுவல் ஜேசுதாசன்


வாழ்த்து - கதிர் துரைசிங்கம்


பதில் உரை - கே.எஸ். பாலச்சந்திரன்







அவுஸ்திரேலியா - சிட்னியில்


ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டு வெளியீடு ஒக்டோபர் 7ந்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பரமற்றா நகர மண்டபத்தில் சிட்னியின் முதல் தமிழ் வானொலி "தமிழ் முழக்கம்" தனது 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு நாளில் நடைபெற்றது.


எழுத்தாளர் காவலூர் இராசதுரையிடமிருந்து வானொலி மாமா மகேசன் முதல் பிரதியை பெறுகிறார்.



பார்வையாளர்கள்

10/12/2007

லண்டனில் "அண்ணை றைற்" பற்றிய குறிப்பு

லண்டனில் காந்தி மக்கின்ரயர்!
- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -



ஈழத்தில் ஆங்கில நாடக வரலாற்றில் மட்டுமே அறிமுகப்பட்டிருந்த நாடகக் கலைஞரான காந்தி மக்கின்ரயரை தமிழ் நாடக மேடையில் தரிசிக்க முடிந்தது பெரும் பாக்கியம் என்றே கூறவேண்டும். விம்பம் அமைப்பின் நான்காவது ஆண்டு நிகழ்வில் லண்டனில் பிறன்ற் நகர மண்டபத்தில் சென்றமாத இறுதியில் காந்தி மக்கின்ரயரின் ‘சாரத்தின் மகிமை’, ‘வாத்தியார்’ ஆகிய இரு நாடகங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து ஈர்த்த நாடகம் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. பேராதனை, கொழும்பு ஆகிய நாடக அரங்கில் தனிப்பெரும் ஆளுமையாகக் கருதப்படும் ஏனர்ஸ்ட் மக்கின்ரயரின் சகோதரரான காந்தி மக்கின்ரயர் நாடகத்தையே தன் உயிர் மூச்சாகக் கருதும் கலைஞர் ஆவார்.

ஹொலிவூட் திரைப்படத்தில்
கொழும்பு மெதடிஸ்ற் (Methodist) நாடக சங்கத்தில் இருந்து உருவாகி டLionel Wendt அரங்கில் வளர்ந்து லண்டன் Drama Studio வில் புலமைப் பரிசில் பெற்று நாடகக் கலையைக் கற்றுத்தேர்ந்த நாடகக் கலைஞர் ஆவார். அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்ததின் பின்
தன் வாழ்விற்கான ஆதாரமாக நாடகத்தையே வரித்துக்கொண்ட துணிச்சல்காரர். இருபதுக்கும் மேற்பட்ட ஆங்கில ஹொலிவூட் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்த அனுபவம் மிகுந்தவர் காந்தி மக்கின்ரயர். இன்றும் அவுஸ்திரேலியாவில் மேடையேறும் ஆங்கில நாடகங்களில் காந்தி மக்கின்ரயரின் அழுத்தமான நடிப்பாற்றலைக் காணமுடிகின்றது.

தனிநபர் அரங்கு
காந்தி மக்கின்ரயரின் நாடகங்களை லண்டனில் அறிமுகப்படுத்தி உரையாற்றிய விமர்சகர் மு. நித்தியானந்தன் ஈழத்துத் தமிழ் நாடக அரங்கில் தனிநபர் நாடக அரங்கு புதியது அல்ல என்றும் ‘அண்ணை றைற்’ போன்ற நகைச்சுவை நாடகம் மூலம் கே.எஸ். பாலச்சந்திரன் தனிநபர் நகைச்சுவை நாடக வடிவத்திற்கு அடித்தளமிட்டவராகத் திகழ்கின்றார்
என்றும் குறிப்பிட்டார். இன்று தமிழர்களின் புலம்பெயர் வாழ்வில் காந்தி மக்கின்ரயர் அறிமுகப்படுத்தும் தனிநபர் நாடக அரங்கு நமது சூழலுக்கு மிக மிகப் பொருத்தமானது என்றும் அவர்
மேலும் தெரிவித்தார்.

Stand up comedy என்ற நகைச்சுவை நாடக வகை, ஆற்றல் மிகுந்த ஒரு நகைச்சுவை நடிகர் தொடர்ச்சியாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை உருவாக்கியும் பேசியும் நடித்தும் தொய்வு விழுந்து விடாமல் ரசிகர்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்துகின்ற ஒரு நாடக வடிவமாகும். கைதேர்ந்த நடிப்பும் லாவகமும் கருத்துச்செறிவும் துரிதகதியும் இத்தகைய தனிநபர் நகைச்சுவை நாடக வடிவத்திற்கு முக்கிய அம்சங்களாகும்.

29.10.2007
navajothybaylon@hotmail.co.uk

(ந்ன்றி - பதிவுகள்)

Monday, October 1, 2007

வை.ரி.லிங்கம் நிகழ்ச்சி - YT Lingam Show





ஈழத்தமிழர் மத்தியிலே TALK SHOW என்ற வகையிலே முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியான Wonderful YT Lingam Show யை தொடர்ந்து 5 ஆண்டுகளாக கனடாவில் TVI தொலைக்காட்சியில் நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி TTN தொலைக்காட்சியின் மூலம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மீள் ஒளிபரப்பு செய்யபட்டபோது ரசிகர்களின் வாக்கெடுப்பின் மூலம் சிறந்த நிகழ்ச்சியாக பல மாதங்களக முன்னணியில் நின்றது.

TVI தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், YT Lingam Show முதலாவது நிகழ்ச்சி இடம் பெற்றது. 2003ம் ஆண்டில் செப்டெம்பர் மாதம் 7ந் திகதி மாலை 4.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. என்னுடன் கலந்துகொண்ட முதலாவது கலைஞர் எஸ்.ரி. செந்தில்நாதன்.

அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த மகத்தான் வரவேற்பு நிகழ்ச்சியை வெற்றிப்பாதையில் நடைபோட வைத்தது.மொத்தம் 84 கலைஞர்கள் அதிதிகளாக என்னுடன் 125 நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருந்தார்கள்.

100 வது நிகழ்ச்சி 2006 ஜூலை மாதம் 7ந்திகதி ஒளிபரப்பானது. அதுபற்றிய கட்டுரை கீழே வருகிறது.

வை.ரி.லிங்கம் ஷோ (Y.T.Lingam Show) வின் 100வது நிகழ்ச்சி
(கதிர்)
(கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை)


ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி கனடாவிலும், புலம்பெயர் நாடுகளிலும் வயது Nவுறுபாடின்றி எல்லோரிடமும் அபிமானம் பெற்றிருக்கிறதென்றால் அதற்கு வலுவான காரணங்கள் இருக்கவேண்டும். தவறு இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் அதை நாசுக்காக சுட்டிக்காட்டவும், யாரையும் புண்படுத்தாமல் சிரிக்கப்பண்ணுவதும் எல்லோருக்கும் கை வராத சங்கதி. இதை பிரபல கலைஞரான கே.எஸ். பாலச்சந்திரன் தனது Wonderful Y.T.Lingam Show மூலம் சாதித்திருக்கின்றார். புலம்பெயர் தமிழ் மக்களிடையே முதன்முதலாக தமிழ் Talk Showஎன்ற வகையிலே TVI தொலைக்காட்சி நிறுவனத்தினரால்; கனடாவில் கடந்த மூன்ற ஆண்டுகளாக ஒளிபரப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சித்தொடரின் 100வது நிகழ்ச்சி சென்ற July 3 ந்திகதி திங்கட்கிழமை TVI கலையகத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

MY TEAM

TTN தொலைக்காட்சி நிலையத்தாரால் ஐரோப்பாவில் பல நாடுகளிலும், சில மத்தியகிழக்கு நாடுகளிலும் ஒளிபரப்பப்பட்டு வரும் வை.ரி.லிங்கம் ஷோ(Y.T.Lingam Show) நிகழ்ச்சி அந்த நாடுகளில்; உள்ள ரசிகர்களின் பெருத்த அபிமானத்தை பெற்றிருக்கின்றது.



பிரபல கலைஞரான கே.எஸ்.பாலச்சந்திரன் தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சித்தொடரின் 100வது நிகழ்ச்சி ஒளிப்பதிவின்போது இதுவரை இந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய கலைஞர்கள் உட்பட ரசிகர்கள் பலர் கலந்து கொண்டார்கள். TVI நிறுவனத்தின் நிர்வாகத்தைச் சேர்ந்த குமரன் அவர்களின் வரவேற்பரையைத் தொடர்ந்து, இத்தொடரின் 100வது நிகழ்ச்சி ஒளிப்பதிவாகியது. கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரனுடன் எஸ்.ரி.செந்தில்நாதன், ரஞ்சனி தயா ஆகியோர் இணைந்து கொண்டு பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தினார்கள். தொடர்ந்து 100 வது நிகழ்ச்சியைக் குறிக்கும் விழா ஆரம்பமாகியது. கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் 100வது நிகழ்ச்சியைக் கொண்டாடுமுகமாக கேக் வெட்டி ஆரம்பித்துவைக்க, முன்னாள் ரூபவாகினி தமிழ்ப் பணிப்பாளர் பி. விக்னேஸ்வரன், பிரான்ஸிலிருந்து வருகை தந்திருக்கும் முதுபெரும் கலைஞர் எஸ்.ஜேசுரத்தினம் அவர்களை அவையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் தன் சமகாலக்கலைஞரான கே.எஸ்.பாலச்சந்திரன்.; அவர்களுக்கு TVI நிறவனத்தின் சார்பாக விருது வழங்கியதோடு, தங்கள் கலைவாழ்வின் அந்தநாள் நினைவுகளை மீட்டிக் கொண்டார்..

தொடர்ந்து கலைஞர் கணபதி ரவீந்திரன் வாழ்த்துரை கூறி ஆரம்பித்து வைக்க ஒரு நட்சத்திரப்பட்டாளமே அணிவகுத்து வந்து மேடையேறியது. அத்தனைபேருமே வை.ரி.லிங்கம் ஷோவில் பங்குபற்றியவர்கள். சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் அவர்கள,; தன்னை இனம் காணமுடியாத அளவிற்கு ஒரு பாத்திரப்படைப்பில் அறிமுகம் செய்ததினால், தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு தங்கப்பதக்கம் சூட்டி மகிழ்ந்தார்.

~காதோடு காதாக~ கதிர் துரைசிங்கம் அவர்கள் வாழ்த்துரை கூறி கலைஞர் பாலச்சந்திரனுக்கு பூச்செண்டு வழங்கினார்.

தொடர்ந்து வை.ரி.லிங்கம் ஷோவில் பங்குற்றிய மற்ற கலைஞர்களின் பங்களிப்பு தொடர்ந்தது. கரு.கந்தையா, கலகலப்பு எஸ். கே. தீசன், ஸ்ரீமுருகன், திலீப்குமார், பாஸ்கரன், அன்ரன் பீலிக்ஸ், நேசன், எஸ்.ரி. செந்தில்நாதன், தயாபரன் ஆறுமுகம், கமல்பாரதி, ராகுலன், சுமுதினி, சேகர், நர்த்தனன், ரூபி யோகதாசன், யசோ, தமிழன் வழிகாட்டி செந்திலாதன், குகன், கணேஷ், தயா ரஞ்சி, சிவானந்தன் என்ற நட்சத்திரப் பட்டாளம் அணிவகுத்து TVI நிறுவனத்துக்கும், தங்களை பங்குபற்றவைத்த கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கும் நன்றி கூறினார்கள். இவர்கள் அனைவரையும் ஒருமிக்கக் காணக்கிடைத்ததே ஒரு சந்தோசமான அனுபவமாக இருந்தது. பார்வையாளர்களும் தங்கள் பாராட்டினை தெரிவித்தார்கள்.

ஏற்கெனவே ஒளிபரப்பப்பட்ட வை.ரி.லிங்கம் ஷோ நிகழ்ச்சிகளை தொகுத்து DVD யில் வெளியிட்டால் அது மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டத.


Monday, June 25, 2007

பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் தயாரான மூன்று குறும்படங்களின் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று ( 24.6.07) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஸ்கார்பரோ செல்லச்சந்நிதி முருகன் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. சமூக சேவையாளரும், எழுத்தாளரும், கலை ஆர்வலருமான கதிர் துரைசிங்கம் விழாவுக்கு தலைமை வகித்தார். இவ்விழாவில் கலந்துகொள்ளவென பிரான்சிலிருந்து வருகை தந்த கலைஞர் ஏ. ரகுநாதன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, அவர் நடித்த "பேரன் பேத்தி" குறுந்திரைப்படத்தின் இயக்குனர் பராவின் பன்முகத்திறமை பற்றியும், "எது மட்டும்" குறுந்திரைப்படத்தின் இயக்குனர் ஜனா வதனனின் கலை ஆர்வத்தையும் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து செல்லசந்நிதி ஆலய பூசகர் பொன். புவனேந்திர ஐயர் ஆசியுரை வழங்கினார். பத்திரிகையாளரான "உதயன்" ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் தனது ஆசியுரையில், தாயகத்தில் தான் பார்த்து ரசித்த நம்மவர்களின் நல்ல திரைப்படங்களை குறிப்பிட்டு அந்த முயற்சிகள் தொடர்ந்திருந்தால் எமக்கென ஒரு சினிமாத்துறை உருவாகி வலுப்பெற்றிருக்கும் என்றும், இத்தகைய குறும்படங்களின் வெளியீடு வரவேற்புக்கு உரியதென்றும் குறிப்பிட்டார். அதிபர் பொ. கனகசபாபதி தனது வெளியீட்டுரையில் DVD தொகுப்பில் இடம்பெற்ற மூன்று குறுந்திரைப்படங்களில், "பேரன் பேத்தி" வலியுறுத்திய கருத்தைத்தான், அதாவது எங்கள் குழந்தகளுக்கு தாய் மொழியான தமிழ் மொழி கற்பிக்கவேண்டும் என்று இங்கு தமிழ்த்தினங்கள் நடத்தி, கருத்தரங்குகள் நடத்தி வலியுறித்தி வருகிறோம். அந்தக் கருத்தை இக்குறுந்திரைப்படம் மிக எளிதாக ஆனால் மனதில் பதியும் வண்ணம் சொல்லியிருக்கிறது என்று கூறினார். அத்தோடு இப்படத்தில் குழந்தைகள் முக்கியமாக சிந்தி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பாராட்டினார். "எதுமட்டும்" குறுந்திரைப்படம் பெற்றார் - பிள்ளகள் உறவை சித்தரிக்கும் நிதர்சமான வாழ்க்கையை ஒட்டியது என்றும், தாயன்பு கிடைக்காத ஒரு வேற்றின இளைஞன் அந்த ஏக்கத்தினால் புத்தி பேதலித்து விடும் அளவிற்கு போய்விடுவதை காட்டுவதினால் தற்கால நிகழ்வுகளுக்கும் அதற்கும் தொடர்புத்தன்மை இருக்கிறதெனவும் குறிப்பிட்டார். விழாவிற்கு தலைமை வகித்த கதிர் துரைசிங்கம் தனது தலைமை உரையில், குறுந்திரைப்படங்கள் சிறுகதைகள் போன்று வாழ்க்கையின் வெட்டுமுகத்தை கூறுகிறதென்றும், தென்னிந்திய வர்த்தக சினிமாவோடு போட்டி போட முடியாத நிலையில் எம்மவர்களின் கலை வெளிப்பாடுகளுக்கு தளமாக குறுந்திரைப்படங்கள் அமையும் எனவும், அவை சமூகசீர்குலைவு, வாழ்க்கை பிறழ்வுகள் என்பனவற்றை மட்டும் சித்தரிப்பதோடு நின்றுவிடாது நகைச்சுவையானதாக கூட இருப்பதில் தடையேதும் இல்லை என்றார். முன்னாள் ரூபவாகினி தமிழ்நிகழ்ச்சிப் பொறுப்பாளரும். தற்போது கனடா ரிவிஐ தொலைக்காட்சி நிறுவனத்தில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராக கடமையாற்றுபவருமான பி. விக்னேஸ்வரன் ஆய்வுரை நிகழ்த்தினார். "பேரன் பேத்தி" குறுந்திரைப்படம் நாடகத்தன்மை அம்சம் மிக்கதாக சொல்லவந்த கருத்தை நேர்கோட்டில் சென்று கூறியதாகவும், "எது மட்டும்" குறுந்திரைப்படத்தில் முக்கியபாத்திரமாக ஆரம்பத்தில் தமிழ் இளைஞன் அறிமுகப்படுத்தப்பட்டு இடையில் கதையில் மற்ற இளைஞன் முக்கியத்துவம் பெறும்போது திரைக்கதையில் பிறழ்வு ஏற்படுகின்றது என்றும் கூறியதோடு, இத்தொகுப்பில் உள்ள மூன்றாவது குறுந்திரைப்படமான கே. எஸ். பாலச்சந்திரனின் "வாழ்வெனும் வட்டம்" எற்கெனவே சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றதினைக் குறிப்பிட்டு, கதை சொல்லும் கலை என்ற வகையிலே திரைக்கதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இக்குறுந்திரைப்படத்திலே ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக தகவல்கள் பார்வையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு அவர்களின் ஆவலை தூண்டும் வகையிலே கதை நகர்த்தப்பட்டுள்ளது என்றார். இத்துறையில் ஈடுபட விரும்புவர்கள் திரைக்கதை எழுதுவதில் பயிற்சி அவசியம் பெறவேண்டும் என்றும் கூறினார். முடிவில் பாரதி புறொடக்ஷன்ஸ் அதிபரும், "வாழ்வெனும் வட்டம்" தயாரிப்பாளரும், நடிகருமான எஸ். மதிவாசன் நன்றியுரை வழங்கியதோடு விழா இனிதே நிறைவெய்தியது. நூற்றுக்கணக்கான கலைஞர்களும், கலை ஆர்வலர்களும் கலந்துகொண்ட இந்த விழா இத்தகைய விழாக்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது என்று பலர் கருத்து கூறினார்கள்.