Wednesday, June 30, 2010

கனடாவில் தமிழ்ப்பிரியாவின் நூல்கள் வெளியீடு


ஏழாலையில் பிறந்தவர். 20 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் சிந்தாமணி, குங்குமம், ஈழ்நாடு, சுடர் போன்ற பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் சிறுகதைகளாக எழுதிக்குவித்தவர் . தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருபவர். தமிழ்ப்பிரியா இளங்கோ.



சென்ற சனிக்கிழமை கனடாவில் இவரது "காம்பு ஒடிந்த மலர்", "ஒரு நியாயம் விழிக்கின்றது" என்ற இரண்டு சிர்றுகதைதொகுதிகள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர் சின்னையா சிவனேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கலைஞர் சோக்கல்லோ சண்முகநாதன், பி.விக்னேஸ்வரன், ஞானரட்னம், மீரா, கவிஞர் கந்தவனம். உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ஆகியோருடன் நானும் சிறப்புரை வழங்கினேன்.

எனது பேச்சில் " யாழ்ப்பாணத்தில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் நான் பணியாற்றிய காலத்தில் அங்கு தொழில் நிமித்தம் வருகைதந்த முத்தையா என்ற பெரியவர் தனது மகள் ஒரு எழுத்தாளர் என்றும் அவர் 'குங்குமம்" இந்திய சஞ்சிகைக்காக என்னை பேட்டிகாண விரும்புவதாகவும் சொன்னார். அவரது மகள்தான் தமிழ்ப்பிரியா. அவர் நான் சம்மதிக்கவும் என்னுடன். செங்கை ஆழியான், மங்கையர்க்கரசி அமிதலிங்கம், சிரித்திரன் சிவஞானசுந்தரம் ஆகியோரையும் பேட்டிகண்டு "குங்குமம்" ஆண்டுமலரில் அவை பெளிவந்தன என்று கூறி, அவரது "கருவிகள்" என்ற சிறுகதை எனக்குப்பிடித்தது என்பதற்கான விளக்கத்தையும் கூறினேன்.

ஏழாலையில் பிறந்தவரான இலங்கையர்கோன் எழுதிய " வெள்ளிப்பாதசரம்' சிறுகதையை நயந்து, அவரது வானொலித்தொடர் நாடகமான "விதானையர் வீட்டில்' எனது வானொலிநாடகப் பிரவேசத்திற்கு காரண்மாக அமைந்த கதையையும், அதே ஊரில் பிறந்த கே.எம்.வாசகர் எவ்வாறு என்னைப்போன்றவர்களை வானொலி நடிகர்களாக புகழ்பெறவைத்தார் என்பதையும் கூறினேன்.

விழா சிறப்பாக நடந்தது.

"நியாயம் விழிக்கின்றது'" சிறுகதைத்தொகுதிக்கான முல்லை அமுதனின் விமர்சனத்தை
இந்தப்பக்கத்தில் வாசிக்கலாம்.

"காம்பு ஒடிந்த மலர்" விமர்சனத்தை
இங்கே காணலாம்.

No comments:

Post a Comment