Monday, November 5, 2012

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருது

இலங்கை சாகித்ய விருது தெரிவில் இடம் பெற்ற எனது " நேற்றுப் போல இருக்கிறது" நூல் தொடந்து மற்றுமொரு கெளரவத்தையும் பெற்றிருக்கிறது.


http://youtu.be/AF6ydBn9F04 (காணொளி காண்க)

யாழ் இலக்கியவட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் நடாத்தும் சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் வைபவம் யாழ் நாவலர் மண்டபத்தில் நவம்பர் 4ந் திகதி நடைபெற்றது. இதில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் 2011க்கான நுல்களில் நானாவித பிரிவில் சிறந்த நூலாக எனது "நேற்றுப் போல இருக்க்கிறது' தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது.
எனது மருமகன் றுஷான் ஹண்டி என் சார்பில் விழாவில் கலந்து கொண்டு. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் என். சண்முகலிங்கத்திடமிருந்து விருதை பெற்றக்கொண்டார்.


எனது வானொலிக்கால நண்பரும், பிரபல ஒலிபரப்பாளரும், கவிஞர் நீலாவணனின் மகனுமான எஸ்.எழில்வேந்தன் இலக்கியவட்ட விருதை பேராசிரியர் சிவலிங்கராசா அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.

1 comment:

  1. சொல் புதிது...சுவை புதிது...
    -----------------------------------------------

    முத்தொட்டுனூரு பாடல் (3*9*100 = 2,700 Poems)
    http://ulikininpin10.tumblr.com/

    ReplyDelete