Wednesday, October 20, 2010

காலச்சுவடு இதழில் எனது நாவல் விமர்சனம்



இம்மாத காலச்சுவடு இதழில் (ஒக்டோபர் 2010) எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" பற்றிய விமர்சனம் வெளிவந்துள்ளது. பிரபல் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான பி.விக்னேஸ்வரன் மதிப்புரையை எழுதியிருக்கிறார்.எனது நாவலுக்கு கிடைத்த ஏழாவது விமர்சனத்தை பிரசுரித்த "காலச்சுவடு" நிர்வாகத்திற்கும், நிர்வாக ஆசிரியர் கண்ணன், பொறுப்பாசிரியர் தேவி பாரதிக்கும் என் நன்றி.

" 1970ஆம் ஆண்டு கே.எஸ்.பாலச்சந்திரன் இலங்கையில் வானொலிக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டு, நாடக ஒலிப்பதிவுகளுக்கு வரும்போது ஏற்பட்ட அறிமுகம் பின்னர் நான் தயாரிப்பாளனாக வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தயாரித்த பல நாடகங்களில் அவர் பங்குபற்றியதன்மூலம் மேலும் நெருக்கமானது. அங்குள்ள கலைஞர்களில் நான் மிக நெருக்கமாகப் பழகிய ஒருசிலரில் பாலச்சந்திரனும் ஒருவர். சினிமா, நாடகம், எழுத்திலக்கியம் என்று எந்தத் துறை பற்றியும் சம்பாஷpக்கக்கூடியவர் பாலச்சந்திரன். கலைத்துறையில் அவரது பன்முக ஆற்றல், ஈடுபாடு பற்றியெல்லாம் மிக விளக்கமாக பி.எச். அப்துல் ஹமீட் அவர்கள் 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' நாவலின் முகவுரையில் விபரித்திருக்கிறார்.

பாலச்சந்திரனின் பன்முக ஆற்றல்பற்றி அறிந்திருக்கும் எனக்கு அவரது மிகப்பிந்திய ஒரு வெளிப்பாடான நாவலாசிரியர் முகம் மிகுந்த வியப்பை அளிக்கிறது. இவர் இந்த ஆற்றலை முன்பே வெளிக்காட்டியிருந்தால் எழுத்துலகிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராக இருந்திருப்பார். ஒருவேளை அவரது நீண்டகால பல்துறை அனுபவங்கள்தான் இப்படி யொரு ஆற்றலாக வெளிப்படுகிறதுபோலும் என்றும் கருதுகிறேன்.|


தொடர்ச்சியை காலச்சுவடு இணையப்பக்கத்தில் இங்கே பார்க்கலாம்.

No comments:

Post a Comment