Friday, October 1, 2010

"தூறல்" பெருக்கின்றது....


"தூறல்" பெருத்தால் அது மழைதான்..!

கனடாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "தூறல் .. " அட்டகாசமாக வண்ணத்தில் தோய்த்தெடுத்தது போல வெளிவந்து, இலவசமாக எல்லோரினதும் கைகளில் தவழ்ந்தபோது, மனதிற்குள் ஒரு சந்தேகம் எழ்த்தான் செய்தது.

இவ்வளவு அழ்கான அச்சமைப்பில், வழுவழுப்பு காகிதத்தில், கவர்ச்சியான படங்க்ளுடன், ஒருபக்கம், இரண்டு பக்கங்களுக்கு மேலாகப் போகாத படைப்புகளுடன் எத்தனை நாட்களுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம்தான்.

அந்த சந்தேகங்கள் யாவையும் தகர்த்தெறிந்து கொண்டு, இதோ முதல்வருட முடிவில் நான்காவது இதழும் எங்கள் கைகளுக்கு கிடைத்து விட்டது.

இன்னமொரு திருப்பம். அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், குரு அரவிந்தன், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசபாபதி என்று அறியப்பட்டவர்கள் யாவரும் எழுதுகிறார்கள்.

முதலாவது இதழில் இருந்து "என் மனவானில்" என்ற எனது நினைவுத்தொடர் கட்டுரை வருவது தனிச்சந்தோசம்.

"தூறல்" சஞ்சிகைக்கு பொறுப்பானவர்களின் கைகளைப் பற்றி உற்சாகமாக குலுக்க விருப்பமாகவிருக்கிறது. விளம்பரதாரர்களின் ஆதரவு தாராளமாக கிடைத்தால் "தூறல்" பெருமழையாகி, எங்களை ஆனந்தம் கொள்ளவைக்கும்..

பிரதம ஆசிரியரான ராஜ்மோஹன் செல்லையாவுக்கு ஒரு பூங்கொத்து. பிடியுங்கள்.

1 comment:

  1. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

    - தூறல் சார்பில் ராஜ்மோகன்

    ReplyDelete